தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை – ஊழியர்களுக்கான எச்சரிக்கை!
தமிழகத்தில் அரசு நிர்ணயம் செய்யும் விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மது விற்பனை:
தமிழகத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்யும் விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அந்த அறிவிப்பினையும் மீறி மதுபான கடைகளில் சில்லரை விற்பனையை விட ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கான முக்கிய எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்`எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு – வலுக்கும் கோரிக்கை!
அதாவது, டாஸ்மாக் கடைகளில் அரசின் அறிவிப்பினையும் மீறி கூடுதலாக மதுபானம் விற்பனை செய்தால் அந்த ஊழியர்கள் பணியில் இருந்து உடனடியாக நீக்கம் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மதுபானத்திற்கும் கூடுதலாக ரூ.10 வசூல் செய்யப்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை ஊழியர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் அரசின் அறிவிப்பிற்கு மதிப்பு கொடுக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.