தமிழகத்தில் கஞ்சா, போதை பொருள் கடத்துபவர்களின் மீது கடும் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை!

0
தமிழகத்தில் கஞ்சா, போதை பொருள் கடத்துபவர்களின் மீது கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் கஞ்சா, போதை பொருள் கடத்துபவர்களின் மீது கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் கஞ்சா, போதை பொருள் கடத்துபவர்களின் மீது கடும் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் சென்னை பெருநகரில் கஞ்சா, போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல் துறையினர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்

போதை பொருள் கடத்தல்

தமிழகத்தில் கஞ்சா, போதை பொருட்கள் உள்ளிட்டவை கடத்துபவர்களின் எண்ணிக்கையும் விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அத்துடன் குட்கா, பான் மசாலா முதலிய போதைப் பொருட்களின் புழக்கமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனால் தமிழக அரசு போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை அரசு கையாண்டு வருகிறது. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக சென்னை பெருநகரில் கஞ்சா, போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல் – 4 வயது சிறுமி உயிரிழப்பு! அச்சத்தில் பொதுமக்கள்!

இதற்கென போதை தடுப்புக்கான நடவடிக்கை மூலமாக சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை என 7 நாட்கள் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. அதன்படி சென்னையில் பல்வேறு இடங்களில் கஞ்சா, போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று சோதனை மேற்கொண்டதில் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 31 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து 66 கிலோ 62 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியிருப்பதாவது, சென்னை பெருநகர காவல் துறையினர் கஞ்சா, போதை பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக கடத்தும் நபர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கென தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா, போதை பொருட்களை கடத்துபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!