கடைகள் மதியம் 1 மணி வரை மட்டுமே இயங்கும் – கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் இன்னும் குறையாமல் உள்ளதால் கடைகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அனைத்து மளிகை கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைகள் இயங்கும் நேரம் குறைப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. கட்டுக்கடங்காமல் பரவி வரும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முழு ஊரடங்கை அறிவித்தார். ஊரடங்கு மட்டுமே தற்போது கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றும் என சுகாதாரத்துறை கூறுகிறது. அதனால் மே 10 முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய சேவைகள் மட்டும் தடையின்றி வழங்கப்பட்டது.
ஜூன் 14க்கு பிறகு ஊரடங்கு தளர்வுகள்? முதல்வர் முக்கிய ஆலோசனை!
இந்த ஊரடங்கால் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று குறைந்தது. ஆனால் கோவை, திருச்சி, ஈரோடு, மதுரை, சேலம் போன்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த மாவட்டங்களுக்கு முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, ஜூன் 7 வரை ஊரடங்கை நீட்டித்தார். தளர்வுகள் இல்லாத முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. காய்கறி, மளிகை போன்ற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மாலை 5 மணி வரை கடைகளை திறக்க அனுமதியளித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் கடைகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஈரோடு அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைவரின் நலனுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவிற்க்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பின் மாநில இணை செயலாளர் சிவநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அங்கு தொற்று பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் ஜூன் 14 வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.