தமிழகத்தில் இலவச ரேஷன் அரிசி விநியோகம் நிறுத்தம்? அமைச்சர் விளக்கம்!
தமிழக ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
இலவச அரிசி:
தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் மலிவு விலையில் மளிகை பொருட்களை பெற்று வருகின்றனர். கடந்த ஊரடங்கு மாதங்களில் மாநில அரசு ரேஷன் கடைகள் மூலம் நிவாரண பொருட்களை வழங்கியது. இதன் மூலம் ஏராளமான ஏழை எளிய மக்கள் பயனடைந்தனர். ரேஷன் கார்டு அனைத்து வேலைகளுக்கு அவசியமாகிறது. மேலும் இருப்பிட சான்றாகவும் கருத்தில் கொள்ளப்படுகிறது. அதனால் பெரும்பாலான மக்கள் ரேஷன் கார்டு பெற முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரேஷன் கார்டு தொடர்பான விதிகள் மாற்றப்பட போதவதாகவும் அதனால் இனி தகுதி பெற்றவர்கள் மட்டுமே ரேஷன் பொருட்களை பெற முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநில மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
HDFC வங்கியின் ரூ.18,000 நிதியுதவியை பெற வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
அதே போல தமிழகத்திலும் இலவச ரேஷன் அரிசி வழங்கப்படமாட்டாது என்று தகவல் வந்துள்ளது. இது குறித்து பேசிய தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய அரசின் அறிவிப்பால் இலவச அரிசி திட்டம் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் தேவையில்லை. மேலும் கடத்தலின் போது பறிமுதல் செய்யப்படும் ரேஷன் அரிசியை மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தற்போது தமிழகத்தில் பல்வேறு நெருக்கடிகளை சமாளித்து தற்போது நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்