தமிழக அரசு பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நடவடிக்கை – மேயரின் முக்கிய தகவல்!
தமிழகத்தில் சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் எனவும் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் கூடுதலான தகவல்களை சென்னை மேயர் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகள்
தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு மண்டலத்திலும் குறைகள் கேட்டறியப்பட்டு தீர்வுகள் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் மணலி மண்டலத்தில் உள்ள 15 முதல் 22வது வார்டு வரை வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மண்டல அலுவலகத்தில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் துணை மேயர், மாநகராட்சி ஆணையர், வட்டார துணை ஆணையர், மண்டல குழு தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு மண்டலத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து, ஒவ்வொரு மண்டல அலுவலகத்திலும் வெள்ளிக்கிழமை அன்று மாமன்ற உறுப்பினர்களுடன் மாநகராட்சி மேயர் கூட்டம் நடைபெறும். இதில் மாவட்ட உறுப்பினர்களிடம் இருந்து அவர்கள் பகுதிகளிலுள்ள குறைகளை பற்றி கேட்கப்படும். மேலும் இந்த குறைகளுக்கு உடனடி தீர்வுகள் கிடைப்பதற்கு வழி வகைகள் செய்யப்படுகிறது. அந்த வகையில் மணலி மண்டலத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டலத்தின் குறைகளை மாவட்ட உறுப்பினர்கள் மாநகராட்சி மேயரிடம் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 22 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – சூதாட்ட விடுதிகள் மூடல்! அரசு நடவடிக்கை!
இதில் குறிப்பாக மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் அரசு பள்ளிகளை மாநகராட்சியோடு இணைக்க வேண்டும் என்றும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி மேயர் கூறியதாவது, இது தொடர்பாக அரசு பள்ளிகளை மாநகராட்சியோடு இணைக்க கல்வித்துறை அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன்படி ஒரு வருடத்திற்குள் இதனை செய்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.