தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் – பெறுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சேர விண்ணப்பிப்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
இலவச தையல் இயந்திரம்:
தமிழகத்தில் பெண்கள் சுய தொழில் செய்து முன்னேற அரசு பல திட்டங்களை வகுத்து அதை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதில் ஒன்றாக இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.. இது சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் ஏராளமனோர் பயன் பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் தையல் இயந்திரம் பெற பல நிபந்தனைகள் உள்ளது.
IPL அலசல் 2021: டேவிட் வார்னரை அவமதிக்கும் ஐதராபாத் அணி! ரசிகர்கள் ஆவேசம்!!
அதன்படி தையல் வேலை தெரிந்த 20 முதல் 40 வயது வரை உள்ள கணவனை இழந்த விதவைப் பெண்கள்,ள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், உடல் ஊனமுற்ற பெண்கள், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பெண்கள் போன்றவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் யாருடைய உதவியும் இன்றி அரசின் இலவச தையல் இயந்திர உதவியுடன் தொழில் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.
ICC T20 உலக கோப்பை போட்டியில் 70% ரசிகர்களுக்கு அனுமதி – அதிகாரபூர்வ அறிவிப்பு!
இத்திட்டத்தில் சேர ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வருமானச் சான்று, பிறந்த தேதிக்கான வயதுச் சான்று, விதவை என்பதற்கான சான்று கணவரால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்று,முறையாக தையல் பயிற்சி முடித்ததற்கான சான்று போன்ற ஆவணங்கள் அவசியமாகும்.