குறித்த நேரத்திற்கு முன்பாக திட்டங்களை முடிக்க நடவடிக்கை – பிரதமர் மோடி பெருமிதம்!
நாட்டில் அதிவிரைவுத் திட்டம் பன்முனை இணைப்புக்கான தேசிய பெருந்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, அதன்பின்னர் உரையாற்றியுள்ளார்.
பிரதமர் பெருமிதம்:
பிரதமர் மோடி இன்று அதிவிரைவுத் திட்டம் பன்முனை இணைப்புக்கான தேசிய பெருந்திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், பிரகதி மைதானத்தில் புதிய கண்காட்சி வளாகத்தையும் தொடங்கி வைத்துள்ளார். அதன்பிறகு அவர் பெருமிதத்துடன் இந்த திட்டம் பற்றி உரையாற்றி உள்ளார். அதில், தற்சார்பு இந்தியா தீர்மானத்துடன் அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்தியாவின் அடித்தளம் இன்று அமைக்கப்படுகிறது.
தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை!
இந்தப் பெருந்திட்டம் 21ஆம் இந்தியாவின் நூற்றாண்டுக்கு அதிவிரைவு சக்தியை அளிக்கும். இந்திய மக்கள், இந்திய தொழில்துறை, இந்திய வர்த்தகம், இந்திய உற்பத்தியாளர்கள், இந்திய விவசாயிகள் ஆகியோர் இந்த அதிவிரைவு சக்தி பிரச்சாரத்தின் மையமாக உள்ளனர். முன்னேற்றத்திற்கு வேகம், ஆர்வம், மற்றும் ஒட்டுமொத்த முயற்சிகள் தேவை. குறித்த நேரத்தில் திட்டங்களை நிறைவேற்றும் பணிக் கலாச்சாரத்தை மட்டும் நாங்கள் உருவாக்கவில்லை, குறித்த நேரத்திற்கு முன்பாக திட்டங்களை முடிக்கும் முயற்சிகளும் நடக்கின்றன.
நீட் விலக்கு மசோதா விவகாரம் – முதல்வர் ஆளுநருடன் சந்திப்பு?
பெரிய திட்டம் மற்றும் சிறிய அமலாக்கத்திற்கு இடையே உள்ள இடைவெளி காரணமாக ஒருங்கிணைப்புக் குறைபாடு, மேம்பட்ட தகவல், சிந்தனை குறைபாடு மற்றும் மந்த கதியிலான வேலை போன்ற பிரச்சினைகள் கட்டுமானங்களுக்கு தடைகளை ஏற்படுத்துகின்றன. முழு அரசு அணுகுமுறையுடன் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அரசின் ஒட்டுமொத்த சக்தியும் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதன் காரணமாக பல தசாப்தங்களாக நிறைவேற்றப்படாத திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. பிரதமரின் அதிவிரைவு சக்தி திட்டமும் உள்கட்டமைப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று அறிவித்துள்ளார்.