தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – அக்.27 வரை விண்ணப்ப பதிவு!
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் பட்டாசு கடைகள் அமைக்க விரும்புபவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
பட்டாசு கடை:
தமிழகத்தில் மக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. அன்று மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்தும் விழாவை கொண்டாடுவது வழக்கம். பட்டாசுகள் இல்லாத தீபாவளி திருநாளை நினைத்து பார்ப்பது சற்று கடினமான ஒன்று. தற்போது திருவாரூர் மாவட்டத்தில் பட்டாசு கடைகள் அமைக்க விரும்புபவர்கள் இணையதளம் மூலம் அக்., 27 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – போக்குவரத்துத்துறை!
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அரசின் அறிவிப்பு படி தீபாவளியையொட்டி, 30 நாட்களுக்கு பட்டாசு கடை வைக்க தற்காலிக உரிமங்களைப் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் விண்ணப்பங்களை இ.சேவை மையம் அல்லது பொது சேவை மையங்களில், கடை அமைக்க உள்ள இடத்தின் வரைபடம் (அசல்), இடத்தின் உரிமை குறித்த ஆவணங்கள் (அசல் மற்றும் 5 நகல்கள்), ரூ.500-க்கான அசல் செலுத்துச் சீட்டு, முகவரிக்கான சான்று (குடும்ப அட்டை, பான் கார்டு, ஆதாா் காா்டு இவைகளில் ஏதேனும் ஒன்று), உள்ளாட்சி அமைப்பின் ரசீது, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (2) ஆகிய ஆவணங்களுடன் அக்.22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் RTE திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு கட்டண விலக்கு – 419.5 கோடி ஒதுக்கீடு!
தற்போது இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வும் விண்ணப்பங்கள் மீது காவல், வருவாய் மற்றும் தீயணைப்பு துறை அலுவலா்களால் வெடிபொருள் சட்டத்தின்படி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிய உத்தரவுகள் வழங்கப்படும் எனவும் ஆட்சியர் கூறியுள்ளார். எனவே, தற்காலிக பட்டாசு விற்பனைக்கு உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் அக்.27-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.