தமிழகத்தில் ஆர்டலி முறை ஒழிக்க எடுத்த நடவடிக்கை? உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழக அரசின் காவல்துறைகளில் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீட்டில் ஆர்டர்லியாகப் பணியாற்றும் போலீசாரை உடனே திரும்ப பெற வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆர்டலி முறை
தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் காவல் துறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சி முடித்த காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்களின் வீடுகளில் வேலைக்கு பயன்படுத்தி வருவது குற்றம் என்பதால் உயரதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சென்னை காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில், பல காவலர்கள் ஆர்டலிகள் என்ற பெயரில் பணியமர்த்தப்பட்டு, அவர்களின் வீட்டு வேலைகள் உள்பட தனிப்பட்ட பணிகளுக்காக உபயோகப்படுத்தி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாகப் பணியாற்றும் போலீசாரை உடனே திரும்ப பெற வேண்டும் எனவும், ஆர்டலி தொடர்பாக ஏதாவது புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் ஆர்டலி முறையை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்துவருவதாகவும், 19 ஆர்டலிகள் திரும்ப பெறப்பட்டுள்ளனர் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
TNPSC குரூப்-1 தேர்வு இறுதி பட்டியலில் குளறுபடி? அதிர்ச்சியில் தேர்வர்கள்!
Exams Daily Mobile App Download
அதன் பின் ஆர்டலி முறை ஒழிப்பு தொடர்பாக தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் இது குறித்து ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 75வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேயே ஆர்டலி முறை பின்பற்றக் கூடாது. ஆர்டலி ஒழிப்பு முறையை பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.