TNPSC குரூப் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வாணைய தலைவர் தகவல்!

0
TNPSC குரூப் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தேர்வாணைய தலைவர் தகவல்!
TNPSC குரூப் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தேர்வாணைய தலைவர் தகவல்!
TNPSC குரூப் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வாணைய தலைவர் தகவல்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் தேர்வுகளில் அவ்வப்போது நடைபெறும் குளறுபடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்வாணையத் தலைவர் பாலச்சந்திரன் தகவல் அளித்துள்ளார்.

TNPSC தேர்வு

தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக TNPSC தேர்வுகள் எதுவும் நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு 30க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. தவிர TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான அறிவிப்பும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் மார்ச் 7ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இந்த நிலையில் TNPSC தேர்வில் நடைபெறும் சில தில்லுமுல்லுகள் மற்றும் குளறுபடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வாணையத் தலைவர் பாலச்சந்திரன் தகவல் அளித்துள்ளார். அதாவது, திருநெல்வேலியில் தேர்வாணைய வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை வைக்கும் அரசு கருவூலப்பகுதியை ஆய்வு செய்த தமிழ்நாடு அரசு தேர்வாணையத் தலைவர் பாலச்சந்திரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, ‘TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2 A பணியிடங்களுக்கான தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு நடைபெறும் தேதிகள் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் தமிழ் தேர்வுத்தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், OMR சீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக OMR தேர்வுத்தாளின் மேல் பாகத்தில் தேர்வர்களின் சுயவிபர குறிப்பு இருக்கும். இந்த விபரங்கள் 2020க்கு பிறகு தேர்வு அறையிலேயே பிரித்து எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – புதிய விதிகள் குறித்த முழு விபரம் இதோ!

இதனால் யாருடைய OMR சீட் போன்ற விவரங்கள் என்பது கம்ப்யூட்டர் மூலம் மட்டுமே தெரிய வரும். அதே நேரத்தில் சிக்கல்கள் தவிர்க்கப்படும். அதே போல விடைத்தாள்களை கொண்டு செல்லும் வேன்களில் கேமராக்கள் பொருத்தப்படும். மேலும், எழுத்துத்தேர்வுகளை நேரடியாக திருத்தாமல், ஸ்கேன் செய்து கம்ப்யூட்டர் மூலம் திருத்தப்படுவதால் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதத்தில் வெளியாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!