மாநிலங்கள் தோறும் முழு ஊரடங்கு நவம்பர் வரை நீட்டிப்பு? பிரதமரின் மறைமுக தகவல்!
நாடு முழுவதும் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு விகிதம் மற்றும் தடுப்பூசிகள் விநியோகம் குறித்து நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, நவம்பர் வரை இலவச உணவு பொருட்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த தகவலானது முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முழு ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா 2 ஆம் அலையானது இந்தியாவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு உலகமெங்கும் பரவிய கொரோனா முதலாம் அலை காரணமாக மேற்கத்திய நாடுகள் பலவும் கடும் பாதிப்புக்குள்ளானது. இந்தியாவிலும் கொரோனா முதலாம் அலை தாக்கம் அதிகமாக காணப்பட்டாலும், பெரிய அளவு பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. ஆனால் இந்த முறை உருவான கொரோனா 2 ஆம் அலையானது மறக்க முடியாத பல நிகழ்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் மின்தடை குறித்த புகார்களுக்கு நடவடிக்கை – அமைச்சர் விளக்கம்!!
இந்த 2 ஆம் அலையின் போது, நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்படவில்லை என்ற நிலையில், மாநிலங்கள்தோறும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தற்போது கொரோனா தொற்றானது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 1 மாதத்திற்கு முன் 4 லட்சம் வரை தினசரி பாதிப்பை ஏற்படுத்தி வந்த நோய் தொற்று தற்போது படிப்படியாக குறைந்து ஒரு நாளைக்கு 1 லட்சம் வரை புதிய பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் மாநிலங்கள் தோறும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக கடந்த ஆண்டு நோய் பரவலின் போது மக்களுக்கு பல நிவாரண உதவிகளையும், சலுகைகளையும் வழங்கிய மத்திய அரசு இந்த ஆண்டு இத்தகைய அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்தது. இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூன் 7) மாலை 5 மணியளவில், நாட்டு மக்களுடன் உரையாடினார். அந்த உரையாடலின் போது, மாநிலங்கள் தோறும் ஏற்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பாராட்டி பேசியுள்ளார்.
தவிர மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படும் தடுப்பூசி அளவுகளை குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து தீபாவளி பண்டிகை வரை, அதாவது நவம்பர் மாதம் வரை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என ஓரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பானது நவம்பர் மாதம் வரை கொடுக்கப்பட்டுள்ளதால், மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு நடைமுறையானது நவம்பர் வரை நீட்டிக்கப்படுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.