மாநிலம் முழுவதும் ஊரடங்கு தளர்வு, புதிய வழிகாட்டுதல்கள் – சுகாதாரத்துறை அமைச்சர்!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் குப்தா அவர்கள், பண்டிகை காலம் இருப்பதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மற்றும் புதிய வழிகாட்டுதல்களையும் அறிவித்துள்ளார்.
புதிய வழிகாட்டுதல்கள்:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு சமீப காலத்தில் நன்றாக குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றது. கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, மாநிலத்தில் 6 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், புதிய இறப்புகள் ஏதும் பதிவாகவில்லை. அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, இதுவரை மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,48,079 ஆக உள்ளது. இதில் 117 பேர் தற்போது சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் – தமிழக அரசு அறிவிப்பு!
இதுவரை மாநிலத்தில் மொத்தம் 5,133 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் இறப்பு விகிதம் 1.47 சதவிகிதம் ஆக உள்ளது. இதனால் இன்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் குப்தா அவர்கள், 6 ஆம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கான பள்ளிகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் என்றும், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவித்துள்ளார். 6 ஆம் வகுப்புக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்படும். தற்போது பண்டிகை காலம் வர இருப்பதால், தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய திட்டம் துவக்கம்!
அதன்படி, பெரிய மத வழிபாட்டு தலங்களில் ஒவ்வொரு மணி நேரமும் அதிகபட்சமாக 100 பெரிய பக்தர்கள் , அதே நேரத்தில் சிறிய மத இடங்களுக்கு 50% பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அனைத்து உணவகங்கள் மற்றும் கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க அனுமதிக்கப்படும். துர்கா பூஜையின் போது தரிசனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும். சிலைகள் அதிகபட்சமாக 5 அடி உயரத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார். மேலும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், சினிமா அரங்குகள், மல்டிப்ளெக்ஸ், பார்கள் மற்றும் சமூக அரங்குகள் மீதான கட்டுப்பாடுகள் உட்பட பல கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது.