மாநில செய்திகள் – ஜூன் 2019

0

மாநில செய்திகள் – ஜூன் 2019

இங்கு ஜூன் மாதத்தின் மாநில செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 2019
ஜூன் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

ஆந்திரா

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
அமராவதி Y.S. ஜகன்மோகன் ரெட்டி ஈ.எஸ். எல். நரசிம்மன்

ஆந்திர அரசாங்கத்தின் கோதாவரி-பெனா நதி இணைத் திட்டங்களை NGT நிறுத்தி வைத்தது

  • தேசிய பசுமை தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட அனுமதி இல்லாததால் ஆந்திராவின் அரசாங்கத்தின் கோதாவரி-பெனா இணைப்புத் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளது. ஆந்திரா மாசு கட்டுப்பாட்டு வாரியம் சட்டத்தின் படி தகுந்த நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என்று NGTயின்  நீதிபதி  ஆதர்ஷ் குமார் கோயல் கொண்ட ஒரு அமர்வு கூறியுள்ளது.

ஆந்திராவில் விரைவில் பெண்கள் பாதுகாப்பு பிரிவு

  • பெண்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள்/ புகார்களைக் கையாள ஒரு பிரத்யேக மாநில அளவிலான பெண்கள் பாதுகாப்பு பிரிவு விரைவில் அமைக்கப்படும் என்று உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் எம்.சுச்சரிதா தெரிவித்துள்ளார். இந்த அமைப்பு ஒரு மூத்த அதிகாரியின் தலைமையில் இருக்கும், துன்புறுத்தல், ஈவ் டீசிங், வரதட்சணை வழக்குகள் மற்றும் சிறார்கள் தொலைந்த வழக்குகள் போன்ற பிரச்சினைகளைக் கையாளும் அதிகாரங்களைக் கொண்டிருக்கும். கட்டணமில்லா டோல் ப்ரீஎண்ணும் இந்தப் பிரிவுக்கு ஒதுக்கப்பட உள்ளது. 

அசாம்

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
திஸ்பூர் சர்பானந்தா சோனோவால் ஜெகதீஷ் முகி

அசாமில் வளர்ந்து வரும் நோய்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் குறித்து அசாம் ஆய்வு

  • அசாமில் புதிய நோய்களின் தொல்லைகள் அதிகரித்து வருவதால், மருத்துவ ஆய்வில் உணவு பொருட்களில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களைப் பயன்படுத்துவதன் தாக்கம் பற்றிய ஒரு ஆய்விற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் (ICMR) முறையிடத் திட்டமிட்டுள்ளது மாநில அரசு.

வடகிழக்கு உள்நாட்டு தொழிலாளர்கள் திறனாய்வுக் கூட்டம்

  • அசாமில், வடகிழக்கு உள்நாட்டு தொழிலாளர்கள் திறனாய்வுக் கூட்டம் கவுகாத்தியில் நடைபெற்றது. பலவிதமான முகவர்கள், நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் வல்லுநர்கள் மத்தியில் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பரிமாற்றுவதற்கான ஒரு தளத்தை இந்த மாநாடு வழங்கும். திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் அசாம் திறன் மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றால் இந்த முதல் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

அசாம் அரசு வட கிழக்கு திறன் மையத்தில் சேர்வதற்கு மானியம் வழங்கவுள்ளது

  • வடகிழக்கு திறமை மையத்தில் சேர்வதற்கு 1.7 லட்சம் ரூபாய் மானியம் வழங்க அசாம் அரசு முடிவெடுத்துள்ளது. அசாம் திறன் மேம்பாட்டு திட்டத்தின் மிஷன் இயக்குநர் ஏபி திவாரி, முதல் தொகுதி மாணவர்களின் மொத்த திறன் பயிற்சிக் கட்டணம்2 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று கூறினார். முதல் தொகுப்பில் 400 மாணவர்கள் சேர்க்கைக்கு வருவார்கள் என்று தெரிவித்தார்.

அசாம் அரசு கட்டணத் தள்ளுபடி திட்டத்தின் கீழ் பெற்றோர் வருமான வரம்பை உயர்த்தியது

  • அசாம் அரசு 2 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் பெறும் பெற்றோரின் குழந்தைகளுக்கு முதுகலை பட்டப்படிப்பு வரை சேர்க்கை கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது. அனைத்து மாநில அரசு கல்லூரிகளும், 5 பல்கலைக்கழகங்களும் இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

அசாம் அரசு தர்ராங் மாவட்டத்தில் திறன் பல்கலைக்கழகம் அமைக்க உள்ளது

  • அசாம் அரசு தர்ராங் மாவட்டத்தில் 850 கோடி ரூபாய் செலவில் திறன் பல்கலைக்கழகம் அமைக்க உள்ளது. இந்த நிறுவனம் திறன் நகரம் என்று அறியப்படும் என்று அசாம் திறன் மேம்பாட்டு மிஷன் இயக்குநர் ஏ.பி. திவாரி தெரிவித்தார். இது 10 ஆயிரம் இடங்களைக் கொண்ட நாட்டின் முதல் திறன் பல்கலைக்கழகமாக அமைய உள்ளது.

அசாமில் தேயிலை ஏலம் டிஜிட்டல் முறையில் அமையவுள்ளது

  • ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தேயிலைத் தொழிலின் தலைநகராக அறியப்பட்டு வரும் இந்தியாவின் கிழக்கு அசாம் நகரம் ஜோர்ஹட்டில், தேயிலை ஏலம் டிஜிட்டல் முறையில் அமையவுள்ளது. கவுகாத்திக்கு சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள ஜோர்ஹட்டில் இ- ஏலத் தளத்தை வடிவமைக்க, உருவாக்க, செயல்படுத்த மற்றும் நிர்வகிக்க, தேயிலை வாரியத்துடன் எம்ஜங்ஷன் சேவைகள் லிமிடெட் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. 

ஒடிசா

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
புவனேஸ்வர் நவீன் பட்நாயக் கணேசி லால்

 ஒடிசாவில் ஆலிவ் ரிட்லியைப் பற்றிப்படிக்க ஆய்வு மையம்

  • ஆலிவ் ரிட்லிஸின் வெகுஜன கூடு மற்றும் அது தொடர்பான சுற்றுச்சூழல் காரணிகள் பற்றிய ஆய்வுக்காக ஒடிசா கடற்கரையிலுள்ள ரிஷிகுல்யா நதிக்கரைக்கு அருகில் ஒரு நிரந்தர ஆராய்ச்சி மையத்தை நிறுவ ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி மையம் 9 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷிகுல்யா நதிக்கரை அருகே உள்ள காளிகோட் வனப்பகுதியில் இந்த மையத்தை அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.
  • இந்த மையம் ஆமைகள், கடலோர தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பழக்கம் மற்றும் வாழ்விடம் பற்றிய விரிவான ஆய்வுகளில் ஈடுபடுத்தப்படும்.

ஒடிசா பொது விநியோக முறையில் ராகி வழங்க திட்டம்

  • பழங்குடியினரின் பொருளாதாரத்தை வளர்க்கவும், பழங்குடிப் பொருளாதாரத்திற்கு மிகுந்த உற்சாகத்தை வழங்கவும், ஒடிசா அரசாங்கம், பொது விநியோக முறையில், அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொது விநியோக முறையில் ரூபாய் ஒன்றிற்கு ஒரு கிலோ ராகி (தினை) வழங்க முடிவு செய்துள்ளது. 

கர்நாடகா

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
பெங்களூரு எச்.டி.குமாரசுவாமி வஜூபாய் வாலா

நீர் ஏடிஎம்களை ஸ்மார்ட் கார்டு பயன்முறையில் கர்நாடக அரசு மாற்ற உள்ளது

  • அனைத்து குடிநீர் ஏடிஎம்களும் விரைவில் நாணய அடிப்படையிலான சேவையிலிருந்து ஸ்மார்ட் கார்ட் அடிப்படையிலான அமைப்புக்கு மாற்றப்பட உள்ளது. மக்களுக்கு எல்லா நேரங்களிலும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஏ.டி.எம். களை தனியார்மயமாக்குவதற்கு மாநில அமைச்சரவை முடிவு செய்தது.
  • மாநிலத்தில் 18,000 ஏ.டி.எம். கள் உள்ளன அவற்றுள் 16,000 ஏ.டி.எம். கள் பயன் பாட்டில் உள்ளன. 

யக்ஷகண அத்தியாயங்கள் விரைவில் மராத்தியில் அறிமுகம்

  • புனேவிலிருந்து வந்த யக்ஷகன ஆர்வலர்கள் குழு யக்ஷகண அத்தியாயங்களை மராத்தி மொழியில் எழுதி அதை நாடகமாக்க முயற்சித்து வருகின்றனர். யக்ஷகண ஒரு சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான கலை வடிவமாகும்.
  • கர்நாடகா (இந்தியா) மாநிலத்தில் உள்ள உடுப்பியில் உருவாக்கப்பட்ட ஒரு பாரம்பரிய நாடக வடிவம் யக்ஷகண ஆகும். யக்ஷகணம் – நடனம், இசை, உரையாடல், உடைகள், அலங்காரம் மற்றும் மேடை உத்திகள், தனித்துவமான பாணி மற்றும் வடிவத்தைக்கொண்டது. பக்தி இயக்கத்தின் காலத்தின் பாரம்பரிய இசையிலிருந்து இந்த யக்ஷகண நடனம் உருவானது என நம்பப்படுகிறது.

சர்வதேச யோகா தினத்தை நடத்துவதற்கு மைசூர் தயாராகிறது

  • அரண்மனை நகரமான கர்நாடகாவில் உள்ள மைசூர், இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் தேசிய நிகழ்ச்சியை நடத்தும் ஐந்து நகரங்களுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கலாச்சார தலைநகரமான, மைசூரு ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தை நடத்துவதற்கு தயாராகிறது.

 கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தின் அமசேபைலு முதல் சூரிய ஆற்றல் வாய்ந்த கிராம பஞ்சாயத்தாக உருவானது

  • கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தின் குண்டபுரா தாலுக்காவில் உள்ள அமசேபைலு (Amasebailu) முதல் சூரிய ஆற்றல் கொண்ட கிராம பஞ்சாயத்து ஆகும். மொத்தம் 2.13 கோடி ரூபாய் செலவில் சூரிய மின் விளக்குகள் 1800 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் 30:20 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிதியளிக்கப்பட்டது மற்றும் மீதமுள்ள நிதி பஞ்சாயத்து & தொண்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டது.

கேரளம்

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
திருவனந்தபுரம் பினராயி விஜயன் பி. சதாசிவம்

 

ஆலப்புழாவில் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் விரைவில் மேம்படுத்தப்படவுள்ளது

  • பல்வேறு வைரஸ் நோய்களைப் பரிசோதிப்பதற்கான அதன் செயல்பாட்டு நம்பகத்தன்மையை கண்டுபிடிப்பதற்கு ஆலப்புழாவில் வைராலஜி இன்ஸ்டிடியூட் இன்னும் போராடி வருகிறது,வரவிருக்கும் மாதங்களில் இது மேம்படுத்தவுள்ளது.
  • இது தவிர, திருவனந்தபுரத்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் ஒரு வைராலஜி இன்ஸ்டிடியூட் தொடங்கப்பட்டது. மேலும் ICMR இன் கீழ் ஒரு வைராலஜி இன்ஸ்டிடியூட் கோழிக்கோட்டில் அமைக்கப்பட்டது. இருப்பினும், மாநிலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு அந்த நிறுவங்களில் வசதிகள் தற்போது இல்லை. 

கேரளாவில் சினேஹிதா பாலின உதவி மையம்

  • கேரள அரசு சினேஹிதா பாலின உதவி மைய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உள்நாட்டு வன்முறை உட்பட மற்ற குற்றங்களை எதிர்கொள்ள ஆதரவு தருகிறது. சினேஹிதா உதவி மையம், குற்றங்களை எதிர்கொள்ளும் பெண்கள் மற்றும் குழந்தைகளின்  பல்வேறு சிக்கல்களில் தலையிடுவதோடு அவர்களுக்கு எல்லா நேரங்களிலும் தேவையான சட்டப்பூர்வ மற்றும் சமூக ஆதரவு அளிக்கிறது.
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆலோசனை, சட்ட உதவி மற்றும் குறுகிய கால தங்கும் வசதி ஆகியவற்றை வழங்க பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகத்துடன் சினேஹிதா உதவி மையம் ஒருங்கிணைந்துள்ளது.

கேரளா மாணவருக்கு  நிப்பா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

  • கேரளாவில், 23 வயதான கல்லூரி மாணவருக்கு நிப்பா வைரஸ் தொற்று ஏற்பட்டது  NIPAH வைரஸ் தாக்குதலில் இருந்து சமாளிக்க மத்திய அரசு ஆறு உறுப்பினர்களை கேரளாவுக்கு அனுப்பியுள்ளதகவும் மேலும் அணைத்து விதமான உதவிகளையும் கேரளாவிற்கு அளிப்பதாக மத்திய சுகாதாரதுறை அமைச்சர்  டாக்டர் ஹர்ஷ் வர்தன் உறுதியளித்தார்.

‘கரிமீன் இனத்தை பாதுகாக்க ஏரிகளில் பிரத்யேக மண்டலங்கள்

  • அஷ்டமுடி மற்றும் வேம்பநாடு ஏரிகளின் கரையோரங்களில் பாதிக்கப்படக்கூடிய உப்பு நீர் மீன்களின் பெரிய அளவிலான இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பிற்கு உதவ, குறிப்பாக முத்து ஸ்பாட் (கரிமீன்) என்று சொல்லப்படும் ஒரு சுவையான மீன் இனத்தை பாதுகாக்க பாதுகாக்கப்பட்ட இருப்புக்களை உருவாக்க கேரளாவின் மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது. 

தேசிய சராசரியை விட கேரளாவில் வேலைபார்க்கும் பெண்களின் விகிதம் அதிகம்

  • மாநிலத்தின் பொதுத்துறை வேலைகளில் பெண்களின் விகிதம் இன்னும் 40 சதவீதத்தை எட்டவில்லை என்றும், தனியார் துறையில் சற்று அதிகமாக உள்ளது என்று தொழிலாளர் துறை அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். தனியார் துறையில் பெண்கள்4 லட்சம் ஊழியர்கள் அதாவது 50.1%, ஆண்களை விட சற்றே அதிகம் உள்ளனர். இந்த புள்ளிவிவரங்கள் மத்திய அரசின் தொழிலாளர் கணக்கெடுப்பில் சுட்டிக்காட்டப்பட்டதை விட மாநிலத்தில் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, இது பெண் பணியாளர்களின் பங்கை 30.8% ஆகக் கொண்டுள்ளது. தேசிய சராசரியான 23.7%ஐ விட அதிகமாக உள்ளது.

இந்தியாவின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் பயணப் படகு டிசம்பரில் இயக்கபட உள்ளது

  • டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் முதன்மையான சூரிய சக்தியில் இயங்கும் கப்பல் ஆதித்யாவை அறிமுகப்படுத்த கேரளா அரசு தயாராகி வருகிறது.ரூ. 3 கோடிசெலவில்100 பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய   பயண படகு அரூரில் உள்ள ஒரு படகு கடும் தளத்தில் கட்டுமானத்தில் உள்ளது. இது கலப்பினக் கப்பல் சோலார் பேனல்கள், பேட்டரி மற்றும் ஜெனரேட்டரிலிருந்து ஆற்றலைப் பெறக்கூடிய ஒரு மோட்டார் மூலம் இயக்கப்படும்.

தமிழ்நாடு

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
சென்னை எடப்பாடி கே. பழனிசாமி பன்வரிலால் புரோஹித்

 

தமிழ்நாடு சுகாதார சீர்திருத்த திட்டம்

  • இந்திய அரசு, தமிழ்நாடு அரசு (GoTN) மற்றும் உலக வங்கிக்கும் இடையே தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டத்திற்கான $ 287 மில்லியன் கடன் ஒப்பந்தம் புதுடெல்லியில் கையெழுத்தானது .
  • சுகாதாரத் திட்டத்தின் தரத்தை மேம்படுத்துதல், தொற்றுநோயற்ற நோய்களின் பிரச்சனைகளை குறைத்தல் மற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் இனப்பெருக்கம் மற்றும் குழந்தை நல சேவைகளை மேம்படுத்த இந்த திட்டம் கையெழுத்தானது . நிதி ஆயோகின் உடல்நலக்  குறியீட்டில் தமிழ்நாடு அனைத்து இந்திய மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது, இது மிகவும் மேம்பட்ட சுகாதார விளைவுகளை பிரதிபலிப்பதாகவுள்ளது.

பார் கவுன்சில் ஆன்லைன் சேர்க்கையை கைக்கொண்டது

  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பார் கவுன்சிலில் வக்கீல்கள் ஆன்லைனில் பதிவு செய்ய மற்றும் காவல்துறை மூலம் அவர்களின் தகவல்களை ஆன்லைனில் சரிபார்ப்பதற்கான பார் கவுன்சில் ஆன்லைன் பதிவை உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தஹில்ரமணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும் இலவச வைஃபை

  • 218 க்கும் மேற்பட்ட தெற்கு ரயில்வே நிலையங்கள் செப்டம்பர் முதல் வாரத்திதிற்குள் பயணிகளுக்கு இலவச வைஃபை (Wifi) இணைப்பை வழங்க உள்ளது, இதன் மூலம் இந்த வசதி கொண்ட நிலையங்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 4,791 நிலையங்களில் இணைய அணுகலை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதி இது. வைஃபை அணுகும் வாடிக்கையாளர்களின் அங்கீகாரம், மற்றும் கணக்கியல் ஆகியவற்றுக்கான தீர்வை கூகிள் வழங்க வாய்ப்புள்ளது, இது ஆரம்பத்தில் 1 எம்.பி.பி.எஸ் வேகத்தில் இருக்கும். 

15வது மாநகராட்சியாக ஆவடி அறிவிக்கப்பட்டது

  • தமிழ்நாட்டில் ஒரு புதிய மாநகராட்சி உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக சென்னையை அடுத்துள்ள ஆவடி நகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆவடியில் வளர்ந்து வரும் மக்கள் தொகை, வருமான நிலைகள் உயர்வு மற்றும் அதிகமான குடிமை சேவைகளுக்கான தேவை அதிகரிப்பு ஆகியவையால் ஆவடி நகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

தில்லி

முதல் அமைச்சர் ஆளுநர்
அர்விந்த் கெஜ்ரிவால் அனில் பைஜல்

 

கோ ட்ரைபல் பிரச்சாரம் [Go Tribal campaign] புதுதில்லியில் தொடங்க உள்ளது

  • பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் மற்றும் இயற்கை பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் புது டெல்லியில் கோ ட்ரைபல் பிரச்சாரத்தைத் [Go Tribal campaign] தொடங்கவுள்ளது. பழங்குடியினர் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு அமைப்புகளுடன் ஒத்துழைப்பு மற்றும் கூட்டணி அமைப்பதற்காக இந்த நிகழ்வை டிரிஃபெட் ஏற்பாடு செய்துள்ளதாக பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை டெல்லி அரசு அறிவித்துள்ளது

  • பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார் இந்த திட்டத்தின் கீழ் அனைத்து டி.டி.சி. பஸ், க்ளஸ்டர் பஸ் மற்றும் மெட்ரோ ரயில்களில் இலவசமாக பெண்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.மேலும் ஜூன் 8 ஆம் தேதி முதல் நகரின் அணைத்து பேருந்துகளிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொறுத்தப்படவுள்ளதாகவும் டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்.

ஹிமாச்சல நாட்டுப்புற  கலைகள் பற்றிய அரிய படைப்புகள்கண்காட்சி

  • புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் ‘ஹிமாச்சல நாட்டுப்புற கலைகள் பற்றிய அரிய படைப்புகள்’ என்ற  கண்காட்சியை கலாசார அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் திறந்துவைத்தார்.  இந்த கண்காட்சி தேசிய அருங்காட்சியகம் மற்றும் நாட்டுப்புற கலை, குரூகிராமால் ஏற்பாடு செய்யப்பட்டது , இதில் 240 க்கும் அதிகமான கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இமாச்சலப் பிரதேசத்தின் நாட்டுப்புற கலை பாரம்பரியத்தை உயர்த்துவதே இந்த கண்காட்சியின் நோக்கமாகும்.

மருத்துவ மாணவர்களுக்கு 24X7 ஹெல்ப்லைன்

  • இந்திய மருத்துவ சங்கம் அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் கற்பிக்கும் நிறுவனங்களில் ஆலோசனை மையங்களை அமைக்க மற்றும் மனநல சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக மாணவர்களுக்கு உதவ 24×7 ஹெல்ப்லைன் உதவி மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. மனநல சுகாதார சவால்களை எதிர்கொள்ளவும், குடியிருப்பவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இடையில் தற்கொலை சம்பவங்களை குறைப்பததற்காக மருத்துவர்களுக்காக மருத்துவர் (D4D) என்ற பெயரில் ஒரு அமைப்பை IMA தொடங்கியுள்ளது.

 ஸ்வச் ஸர்வேக்ஷன் 2020

  • மத்திய வீடுப்புற மற்றும் நகர்ப்புற அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி புது தில்லியில் ஸ்வச் ஸர்வேக்ஷன் 2020 லீக்கை  தொடங்கிவைத்தார்.
  • ஒரு மூன்றாம் தரப்பினரால் நடாத்தப்படும் ஸ்வச்  ஸர்வேக்ஷன்   கணக்கெடுப்பின் நோக்கம் , பெரிய அளவிலான குடிமக்களின்  பங்கேற்பை ஊக்குவிப்பது , குப்பை மற்றும்  திறந்த வெளி கழிப்பறை இல்லா  நகரங்களை ஏற்படுத்துவதும் மேலும்  சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி நகரங்களில் வாழ ஒரு நல்ல இடத்தை ஏற்படுத்துவது ஆகும்.

தெலுங்கானா

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
ஹைதெராபாத் கே. சந்திரசேகர் ராவ் எஸ். லட்சுமி நரசிம்மன்

தெலுங்கானாவில் பழங்குடியினருக்கு சுகாதார வசதிகள் 

  • பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் (PVTGs) என வகைப்படுத்தப்பட்டுள்ள கொல்லம், தொட்டி மற்றும் மானே ஆதிவாசிகளின் சுகாதார வசதியை மேம்படுத்துவதற்கு ஒரு பிரச்சாரம் தெலங்கானாவில் தொடங்கப்பட்டது.
  • உத்னூர் ஒருங்கிணைந்த பழங்குடி மேம்பாட்டு ஏஜென்சியின் கீழ் பிரிக்கப்படாத அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு சுகாதார வசதியை மேம்படுத்துவதில் இது ஒரு பெரிய முன்னேற்றம் ஆகும்.
  • நிஜாம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (என்ஐஎம்எஸ்), ஹைதராபாத்தைச் சேர்ந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் குழு, நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. PVTGகளுக்கான மத்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் உருவாக்க தினத்தை கொண்டாடுகிறது

  • ஜூன் 2 தேதி 2014 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிளவுபட்டு இந்தியாவின் 29 வது அதிகாரப்பூர்வ மாநிலமாக  தெலுங்கானா மாநிலம்  உருவாக்கபட்டது. இவ்வாண்டு தெலுங்கானா மாநிலம் தனது ஐந்தாம் ஆண்டு உருவாக்க தினத்தை கொண்டாடுகிறது.

தெலுங்கானாவில் ஆசியாவின் மிகப்பெரிய திறந்த, வானம் பார்த்த   குளம்

  • காலேஸ்வரம் லிஃப்ட் பாசன திட்டத்தின் (கே.எல்.ஐ.பி) ஒரு பகுதியாக, “ஆசியாவின் மிகப்பெரிய திறந்த,வானம் பார்த்த குளம் ” இல்லந்தகுந்தா மண்டலத்தில் உள்ள திப்பப்பூர் கிராமத்தில் கட்டப்பட்டது. 92 மீ ஆழம் மற்றும் 56 மீ விட்டம் கொண்ட, குளம் ஒரு டி.எம்.சி அடி நீரை சேமிப்பதற்காக கட்டப்பட்டது மற்றும் மோட்டார்கள் மூலம் சித்திப்பேட்டையில் உள்ள அனந்தகிரி நீர்த்தேக்கத்திற்கும் பின்னர் மல்லன்னசாகர் திட்டத்திற்கும் தண்ணீர் அனுப்புவதற்காக கட்டப்பட்டுள்ளது.

மெகா காலேஸ்வரம் திட்டம் செயல்படுகிறது

  • உலகின் மிகப்பெரிய பல்நோக்கு லிப்ட் பாசனத் திட்டமாகக் கூறப்படும் காலேஸ்வரம் லிஃப்ட் பாசன திட்டத்தை (கே.எல்.ஐ.பி) ஜெய்சங்கர் பூபல்லி மாவட்டத்தில் மெடிகட்டா என்ற இடத்தில், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தொடங்கிவைத்தார். 

மகாராஷ்டிரா

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
மும்பை தேவேந்திர பத்னாவிஸ் வித்யாசாகர் ராவ்

ஆஸ்கார் அகாடமி தலைவர் மராத்தி திரைப்பட விருதுகள் விழாவில் பங்கேற்க உள்ளார்

  • மகாராஷ்டிரா மாநில மராத்தி திரைப்பட விருதுகள் விழாவில் சிறப்பு விருந்தினராக மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் அகாடமி தலைவரான ஜான் பெய்லி பங்கேற்க உள்ளார். இதன் மூலம் இந்தியாவில் நடைபெறும் ஒரு விருது விழாவில் பங்கேற்கும் முதல் அகாடமி தலைவர் ஆனார் ஜான் பெய்லி.

கலை மற்றும் கலாச்சாரத்தின் எலிஃபண்டா திருவிழா

  • எலிஃபண்டா திருவிழா கலை மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக மும்பையில் கொண்டாடப்படுகிறது.
  • எலிஃபண்டா குகைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தளமாகும்.எலிஃபண்டா குகைக்கோவில்களின் தொகுப்பு சிவனுக்கு அர்பணிக்கப்பட்டதாகும்.

மகாராஷ்டிராவில் MSMEக்களுக்கான முதலமைச்சரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான முதலமைச்சரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை (MSME) மகாராஷ்டிரா அரசு விரைவில் தொடங்கவுள்ளது என்று மாநில மேம்பாட்டு ஆணையர் (தொழில்துறை) டாக்டர் ஹர்ஷதீப் காம்ப்ளே தெரிவித்தார்.
  • கைத்தொழில் துறையின் முதன்மை திட்டத்தில் பெண் தொழில்முனைவோருக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

 மும்பையில் உள்ள டிஜிஎப்டியில் கால் சென்டர் திறக்கப்பட்டது

  • ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் சந்தேகங்கள் / கேள்விகள் மற்றும் கேள்விகளுக்கு தீர்வு காண வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல் (டிஜிஎஃப்டி) மும்பையில்  ஒரு கால் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வெளியுறவு வர்த்தக கொள்கை மற்றும் சர்வதேச வர்த்தகம் பற்றிய பொதுவான தகவல்களும் கேட்கப்படலாம்.

நான்கு அணைகளில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி ஆலைகளைப் பெறவுள்ளது மகாராஷ்டிரா

  • மகாராஷ்டிரா நான்கு அணைகளில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி ஆலைகளைப் பெறத்தயாராக உள்ளது. சுவிஸ் சவால் முறையின்படி மிதக்கும் சோலார் பேனல்களை அமைப்பதற்காக வர்தா, பெபாலா, கடக்பூர்ணா மற்றும் பென்டக்லி அணைகளின் பேக்வாட்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் சட்டமன்ற சபையில் தெரிவித்தார். மொத்தம் 500 மெகாவாட் திறன் கொண்டது, ஒரு மெகாவாட் திறன் உற்பத்திக்கு 4.45 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வறட்சியைக் குறைப்பதற்கான குறைகளை விரைவாக நிவர்த்தி செய்வதை உறுதி செய்வதற்கான கண்காணிப்பு அமைப்பு

  • வறட்சி குறைப்பு தொடர்பான குறைகளை விரைவாக நிவர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக மகாராஷ்டிரா அரசு விரைவில் அதன் கண்காணிப்பு அமைப்பை அமைக்கவுள்ளது. விவசாயிகளுக்கு பிரச்சனைகளை தீர்க்க அதிகாரிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தெஹ்ஸில் மற்றும் மாவட்ட அளவிலான குழுக்கள் மூலம் அரசாங்கம் கடுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று அமைச்சர் தெரிவித்தார். மேலும் இழப்பீடு செலுத்துவதற்கான அளவுருக்களில் மாற்றங்களை மாநில அரசு பரிந்துரைக்கும் என்று அவர் கூறினார்

மும்பை மெட்ரோ செயல்படத்தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவு

  • மும்பை மெட்ரோ செயல்படத்தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தது. தற்போதுள்ள மும்பை மெட்ரோ மத்திய கட்கோபர் மற்றும் தலைநகரின் மேற்குப் பகுதியான வெர்சோவாவை இணைக்கிறது.

மத்திய பிரதேசம்

தலைநகர் முதல் அமைச்சர் ஆளுநர்
போபால் கமல்நாத் ஆனந்திபென் படேல்

மத்தியபிரதேசத்திலிருந்து இரண்டு பெண்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை

  • மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளனர். மே 22 அன்று சிந்துவாரா மாவட்டத்தைச் சேர்ந்த பாவனா தெஹரியா மற்றும் செஹோர் மாவட்டத்தைச் சேர்ந்த மேகா பார்மார் ஆகிய இருவரும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து எவெரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இரண்டு பெண்கள் எனும் சாதனையை படைத்தனர்.

நீர் உரிமையை செயல்படுத்தவுள்ளது  மத்திய பிரதேசம்

  • மத்திய பிரதேசத்தில், மாநில மக்களுக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மாநில அரசு ‘நீர் உரிமை’ செயல்படுத்தப் போகிறது. இந்த முயற்சியின் கீழ், எந்தவொரு குடும்பத்திற்கும் அரசாங்கம் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அளவு தண்ணீரை வழங்கும். மத்தியப் பிரதேச அரசு ‘நல்-ஜல்’ திட்டத்தையும் கொண்டு வந்து, இதற்காக நபார்ட் மற்றும் ஆசிய வங்கியிடமிருந்து நிதி உதவி பெறவுள்ளது .

PDF Download

மாநில செய்திகள்Video – ஜூன் 2019

பொது அறிவு பாடக்குறிப்புகள்  PDF Download

பாடம் வாரியான குறிப்புகள் PDF Download

To Read in English: Click Here

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்

Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!