மாநிலம் முழுவதும் மத & பொது கூட்டங்களுக்கு தடை – கொரோனா 3ம் அலை எதிரொலி!
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா மூன்றாவது அலை தடுப்பு நடவடிக்கைகளாக விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்த அரசு, மத மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் படி ராஜஸ்தான் மாநிலத்திலும் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டாம் என கூறவில்லை – முதல்வர் விளக்கம்!
அந்த வகையில் மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய உத்தரவில், ‘ராஜஸ்தான் மாநிலத்தில் பொது பேரணிகள், கண்காட்சிகள், கலாச்சார மற்றும் மத நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை செய்யப்படுகிறது. பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற முறையான கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதை காவல்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வழங்கும் ரூ.7000 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மேலும் அம்மாநிலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பான பணிகளில் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஈடுபட வேண்டும் என உள்துறை செயலாளர் அபய் குமார் அறிவுறுத்தியுள்ளார். அதே நேரத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் எந்தவொரு நிறுவனம் அல்லது பொதுமக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.