தமிழகத்தில் அக்.4ம் தேதி மாநிலங்களவை தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போது காலியாக இருக்கும் 2 எம்.பி இடங்களை நிரப்புவதற்கான மாநிலங்களவை தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவை தேர்தல்
தமிழகத்தில் கடந்த மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், புதிய முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். இதை தொடர்ந்து கொரோனாவால் இடை நிறுத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களையும் நடத்துவதற்கு தமிழக அரசு தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் காலியாக இருக்கும் 2 எம்.பி இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15% கூடுதல் மாணவர் சேர்க்கை – உயர்கல்வித்துறை அமைச்சர்!
வழக்கமாக மாநிலங்களுக்கான சட்டப் பேரவை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை நடத்தும் இந்திய தேர்தல் ஆணையம், மாநிலங்களவை எம்.பி க்களாக பதவி வகித்து வந்த தமிழகத்தை சேர்ந்த கே.பி.முனுசாமி மற்றும் ஆர்.வைத்தியலிங்கம் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த பிறகு அந்த இடங்களுக்கான தேர்வுகளை நடத்துவதாக குறிப்பிட்டுள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – டெபிட் கார்டு மூலம் கடன் உதவி!
அந்த வகையில் எம்பி பதவிகளை நிரப்புவதற்காக தமிழக மாநிலங்களவை தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடையே அதிமுக கட்சியை சேர்ந்த எம்.பி முகமது ஜான் கடந்த மார்ச் மாதத்தில் மறைந்ததையொட்டி, அந்த காலி இடத்தை நிரப்புவதற்கான மாநிலங்களவை தேர்தல் இம்மாதம் 13 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.