அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.40 ஆயிரம் உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!

0
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.40 ஆயிரம் உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.40 ஆயிரம் உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!

மகாராஷ்டிர மாநில அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியை உயர்த்தி அரசு அறிவித்த்து. இதுவரை, மகாராஷ்டிரா அரசு ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில், இது இது 34 சதவீதமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசை தொடர்ந்து பல மாநிலங்களும் தங்கள் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளன. இதுவரை, 34 சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில், ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் தவணை மூலம் அகவிலைப்படியை அதிகரிக்க மகாராஷ்டிர அரசு அறிவித்தது. அதன்பின்னர் டிஏ 5 தவணை பாக்கியாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதில் 2 தவணைகளை அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது. இப்போது மூன்றாவது தவணை செலுத்தப்பட உள்ளது. மகாராஷ்டிர அரசின் இந்த முடிவால் சுமார் 17 லட்சம் ஊழியர்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள்.

பிரசார் பாரதியில் ரூ.60,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!

2019 ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா அரசு ஊழியர்களுக்கும், ஜில்லா பரிஷத் மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கும் 7வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, 2019-20ம் ஆண்டு முதல், 5 ஆண்டுகளில் 5 தவணைகளில் ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க அரசு முடிவு செய்தது. இதன் 3 வது தவணை ஜூன் மாதம் செலுத்தப்படும் என்றும், நான்காவது மற்றும் ஐந்தாவது தவணை செலுத்தும் பணியும் இந்த ஆண்டு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு! ஆன்லைன் மாதிரி தேர்வு!

அரசின் இந்த முடிவால், 7வது ஊதியக் குழுவின் கீழ் உள்ள அரசு ஊழியர்களில் உள்ள குரூப் ஏ அதிகாரிகளின் சம்பளம் அதிக அளவு உயரும். சுமார் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை ஒரே நேரத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், குரூப் பி அதிகாரிகளுக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை பலன் கிடைக்கும். இதன் கீழ், குரூப் சி அதிகாரிகள் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையிலும், நான்காவது பிரிவில் உள்ளவர்கள் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரையிலும் பலன் பெறுவார்கள். மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்களின் டிஏ தற்போது 31 சதவீதமாக உள்ளது. அடுத்த தவணையில் இது 34 சதவீதமாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!