இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!
டெல்லியில் தற்போது இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை அமலில் இருந்து வரும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய காவல்துறையினரால் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இரவு ஊரடங்கு
தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து தீவிரமடைந்து வந்த கொரோனா பரவலை முன்னிட்டு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் பிப்ரவரி 7ம் தேதி முதல் திரும்ப பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த வாரத்தில் வார இறுதி கட்டுப்பாடுகளை தளர்த்திய அரசாங்கம், தினசரி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் பிப்ரவரி 7 முதல் 9 லிருந்து 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பிற கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
இதனுடன் டெல்லியில் ஜிம்கள் மற்றும் ஸ்பாக்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அதே போல அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் 100 சதவீத திறனில் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பார்சல் சேவைகளுக்கு மட்டுமே உணவகங்கள் செயல்பட்டு வந்த நிலையில், இனி உணவருந்தும் சேவைகளுக்காக 50 சதவீத திறனில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் காரில் பயணிக்கும் ஒற்றை ஓட்டுநர்களுக்கு மட்டும் முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
IPL 2022 ஏலம்: தக்கவைக்கப்படாத 5 முன்னணி வெளிநாட்டு வீரர்கள் – ரசிகர்கள் விமர்சனம்!
இப்போது பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியர்கள் மட்டுமே வகுப்புகளை எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திருமணங்களில் கலந்து கொள்ள மொத்தம் 200 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்போது கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் டெல்லியில் இரவு ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை வெற்றிகரமாக செயல்படுத்த டெல்லி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.