நாட்டில் தாய்மொழி கல்வியை மாநிலங்கள் ஊக்குவிக்க வேண்டும் – அமைச்சர் வலியுறுத்தல்!
நாட்டில் மாணவர்கள் தங்களின் கல்வியை தாய் மொழியில் பயின்றால் தான் பல்வேறு துறைகளில் அவர்களின் திறமைகளை பயன்படுத்த முடியும் என மத்திய அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தாய்மொழி கல்வி
நாட்டில் தொழில்நுட்பக் கல்வியை ஆங்கிலத்தில் புரிந்து கொள்ள ஏராளமான மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் தேசியக் கல்விக் கொள்கையில் தொழில்நுட்பக் கல்வியை மாநில மொழிகளில் வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தாய்மொழி கல்வியை நாட்டின் முக்கிய தலைவர்கள் அதிகம் ஊக்கிவித்து வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இதில் குறிப்பாக தாய்மொழி கல்வி தொடர்பாக குடியரசு தலைவர் கூறியிருப்பதாவது, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தாய்மொழி உதவுவதாகவும் அதனால் பள்ளி மாணவர்கள் தாய்மொழி கல்வி கற்பதே சிறந்தது என தெரிவித்துள்ளார். இதையடுத்து தற்போது மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பதாவது, நாட்டில் தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மாணவர்களின் திறமைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு – தெரியாமல் கூட இதை ஷேர் பண்ணாதீங்க – தமிழக டிஜிபி அறிவுரை!
Exams Daily Mobile App Download
இதற்கு மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்பதையே மாநிலங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இந்திய நாட்டின் உண்மையான வரலாறு குறித்தும், மக்களின் தலைவர்கள் குறித்தும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.