மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு – அதிரடி அறிவிப்பு!
குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகையை 3% ஆக உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வு 2021 ஜூலை மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.
DA உயர்வு
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் உட்பட சில மாநில அரசு ஊழியர்களும் அகவிலைப்படியின் (DA) உயர்த்தப்பட்ட பலனை பெற்று வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகை தற்போது 34% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி, ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான DA தொகையை உயர்த்தி அறிவித்து வருகிறது. இந்த வரிசையில் இப்போது குஜராத் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை 3% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இப்போது குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜூலை 1, 2021 2021 முதல் அகவிலைப்படியில் (DA) 3% உயர்வு வழங்கப்படும் என அரசு நேற்று (மே.1) அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவின் மூலம் சுமார் 9.38 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலனைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஜூலை 1, 2021 முதல் இன்று வரையிலான நிலுவைத் தொகை இரண்டு தவணைகளில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, முதல் தவணை 2022 மே மாதத்திலும், இரண்டாவது தவணை 2022 ஜூன் மாதத்திலும் செலுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது 7வது ஊதியக் குழுவின் பலன்களை பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த அகவிலைப்படி உயர்வுக்கு தகுதியுடையவர்கள் என்று அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு சுமார் ரூ.1,217.44 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.