ஜூன் 26 வரை பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு – மாநில அரசு முடிவு!
மேற்கு வங்க மாநில அரசு, பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை ஜூன் 26 வரை நீட்டித்து தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து ஜூன் 27 அன்று புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது.
விடுமுறை நீட்டிப்பு
மாநிலத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வெப்ப அலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மேற்கு வங்க அரசு கோடை விடுமுறையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூன் 26 வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் முந்தைய அறிவிப்பின்படி, மே 2 முதல் ஜூன் 15 வரை பள்ளிகளுக்கான கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் மேற்கு வங்க கல்வித்துறை கோடை விடுமுறையை இப்போது ஜூன் 26 வரை நீட்டித்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் டார்ஜிலிங் மற்றும் கலிம்பாங் உள்ளிட்ட மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஜூன் 27 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் மணீஷ் ஜெயின் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளார். அதாவது மாநிலத்தில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக சில இறப்பு வழக்குகள் பதிவாகியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது அகவிலைப்படி நிலுவைத்தொகை? வலுக்கும் போராட்டம்!
இதற்கிடையில் மேற்கு வங்கத்தின் சில மாவட்டங்களில் குறிப்பாக தெற்கு வங்காளத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நிலவிய மோசமான வானிலை காரணமாக வடக்கு 24 பர்கானாஸின் பனிஹாட்டி தாஹி கண்காட்சியில் மூன்று பேர் பலியானதாக தகவல்கள் பெறப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் மாணவர்களையும் பாதிக்கும் என்று கருதிய அரசாங்கம் இப்போது பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை ஜூன் 26 வரை நீட்டித்து, புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 27 அன்று ஆரம்பிக்கும் என்று அறிவித்துள்ளது.