கிராம ஊராட்சி நிர்வாகக் கட்டுப்பாடு இனி மாநில அரசின் கைகளில் – அரசு அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் கிராம ஊராட்சிகளின் நிதிகளை கையாள தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் அரசின் ஒவ்வொரு புதிய திட்டத்திற்கும் புதிய வங்கி கணக்குகளை தொடங்க வேண்டியது உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கிராம ஊராட்சிகள்
தமிழகத்தில் கிராம ஊராட்சிகளின் நிதி நிர்வாகத்தை கையாள்வதற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் அரசு அறிவிக்கும் ஒவ்வொரு புதிய திட்டத்திற்கும் புதிய வங்கி கணக்குகளை தொடங்கி அவற்றை பராமரிக்க வேண்டிய நிலை உள்ளது. அதன் பின்பு மீண்டும் ஆய்வு செய்வது உள்ளிட்ட பல வேலைகள் உள்ளது. அதன்படி தற்போது கிராம ஊராட்சிகளில் 11 வங்கிக் கணக்குகளையும், 31 பதிவேடுகளையும் ஊராட்சி துறை பராமரித்து வருகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
தற்போது காகிதமில்லா பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து பயன்பாடுகளும் கணினி முறையில் மாற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 12,525 கிராம ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கிராம ஊராட்சிகளில் செய்யப்படும் வங்கி பரிவர்த்தனைகள் குறித்த தகவல்கள் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெளிப்படை தன்மையுடன் நடப்பதில்லை. அதனால் மாநில அளவில் ஒரே கணக்குகளை கிராம ஊராட்சிகள் கொண்டிருக்க வேண்டும் என ஊராட்சி துறை ஆணையர் அரசுக்கு பரிந்துரை வழங்கினார்.
தமிழக டாஸ்மாக் திறப்பு நேரத்தில் மாற்றம்? – உயர்நீதிமன்றம் அதிரடி!
Exams Daily Mobile App Download
இதனை ஏற்றுக் கொண்ட அரசு தற்போது கிராம ஊராட்சிகள், மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் ஒரே ஒரு கணக்கை தொடங்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் இந்த கணக்கின் வழியாக மானியங்கள் பரிமாற்றம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஊராட்சி துறை ஆணையரகத்தில் தனி உதவி மையத்தை அமைப்பதன் வாயிலாக தீர்வு காண முடியும்.