ஜூன் 15 முதல் வார இறுதி, இரவு நேர முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

0
ஜூன் 15 முதல் வார இறுதி, இரவு நேர முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
ஜூன் 15 முதல் வார இறுதி, இரவு நேர முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
ஜூன் 15 முதல் வார இறுதி, இரவு நேர முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை மாநில அரசு அறிவித்து உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.

கூடுதல் தளர்வுகள்:

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து மே மாதம் 15ம் தேதி வரை கொரோனா தொற்றின் தாக்கத்தினால் தினசரி 10,000 முதல் 15,000 பேர் வரை பாதிக்கப்பட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பலனாக மே 15ம் தேதிக்கு பிறகு பாதிப்புகள் குறையத் தொடங்கியது. இதுவரை, மாநிலத்தில் 9.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றினால் பாதிக்கப்ட்டுள்ளனர்.மேலும், 8,856 பேர் உயிரிழந்துள்ளனர்.

தளர்வுகளுடன் கூடிய இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

நேற்றைய நிலவரப்படி, மாநிலத்தில் 172 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,006 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் தற்போது 5619 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். பாதிப்புகள் குறைவாக உள்ளதால் மாநில அரசு கடத்த ஜூன் 7ம் தேதி முதல் சில தளர்வுகளை அளித்தது. அதன்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களை மாலை 4 மணி வரை திறக்கவும், பூங்காக்கள் காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை திறந்திருக்கும் என்றும், அனுமதிக்கப்பட்ட பிரிவுகளின் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கவும் அனுமதி அளித்தது.

செங்கல்பட்டில் ஜூன் 19ம் தேதி வரை மின்தடை – செயற்பொறியாளர் அறிவிப்பு!

ஜூன் 10ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நகரத்திற்குள் நகர பேருந்து மற்றும் மினி பஸ் சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை அதிகாலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. விவசாய பொருட்கள் மற்றும் உபகரணங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் ஆகியவற்றை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்க அனுமதி அளித்துள்ளது.

புதிய கல்வியாண்டு முதல் ஆங்கில வழியில் பட்டப்படிப்பு – முதல்வர் அறிவிப்பு!

தற்போது மாநில அரசு நேற்று கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, 10க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் COVID நெறிமுறையைப் பின்பற்றி 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படவும், உணவகங்கள் 50% வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம். சனிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கள் 5 மணி வரை வார இறுதி ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் அறிவித்துள்ளது. தினமும் மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்துள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!