இன்று முதல் முழு ஊரடங்கில் சில தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!!
கர்நாடகா மாநிலத்தில் கடந்த வாரம் முதல் கொரோனா முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூன் 7) முதல் மாவட்ட பதிவாளர் மற்றும் துணை பதிவாளர் அலுவலகங்களை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் குறைந்து வருவதால் மாநிலங்கள் தோறும் ஊரடங்கு தளர்வுகள் அமலில் உள்ளது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் கடந்த வாரம் முதல், முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 2 ஆம் கட்டமாக ஊரடங்கு தளர்வுகளை அளிப்பதாக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன் படி இன்று (ஜூன் 7) முதல் அனைத்து மாவட்ட பதிவாளர் மற்றும் துணை பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கர்நாடகா மாநிலத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அம்மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இ-பதிவு இணையதளம் திடீர் முடக்கம் – பொதுமக்கள் அவதி!
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில், 12,209 புதிய கொரோனா பாதிப்புகளும் 187 இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் மே 24 ஆம் தேதியில் இருந்து ஜூன் 7 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த கட்டுப்பாடுகள் சில தளர்வுகளுடன் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
I am B.Com(CA)