அரசு ஊழியர்களுக்கு ரூ.4000 போனஸ் – மாநில அரசு அறிவிப்பு!
ஓணம் பண்டிகையை ஒட்டி கேரள மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து உள்ளது. மேலும் பண்டிகை கால முன்பணம் பெறுதல் தொடர்பான விபரங்களையும் வெளியிட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
போனஸ் அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா 2வது அலையால் தினசரி 35 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதிலும் கேரள மாநிலத்தில் தற்போது வரை கொரோனா தொற்று குறையவில்லை. இதனால் அங்கு வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இதற்கிடையில் புகழ்பெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கி உள்ளது. இதனையொட்டி வணிக வளாகங்களை திறக்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே பக்ரீத் பண்டிகையின் போது கூடுதல் தளர்வுகள் வழங்கியதால் கேரள அரசின் மீது விமர்சனங்கள் எழுந்தது.
அரசு ஓய்வூதிய திட்டத்தின் குடும்ப ஓய்வூதிய விதிகள் மாற்றம் – முழு விவரங்கள் இதோ!
இந்நிலையில் ஓணம் பண்டிகையை பொதுவெளியில் கொண்டாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கான போனஸ் தொகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ரூ .4,000 போனஸாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில், போனஸுக்கு தகுதியற்ற ஊழியர்களுக்கு ரூ.2,750 சிறப்பு பண்டிகை கால கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். தவிர, ஊழியர்கள் முன்கூட்டியே ரூ.15,000 பெறலாம், அதை ஐந்து சம தவணைகளில் திருப்பிச் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ராக்கெட்டில் கோளாறு, EOS-03 செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி – இஸ்ரோ அறிவிப்பு!
அனைத்து பகுதி நேர மற்றும் தற்காலிக ஊழியர்களும் ரூ.5,000 முன்பணம் பெறலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சேவை ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தின் படி ஓய்வு பெற்றவர்களுக்கு 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இதன் மூலம் ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவர்.