செப். 1 முதல் பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
செப். 1 முதல் பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
செப். 1 முதல் பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
செப். 1 முதல் பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா 2 ஆம் அலை பாதிப்புகள் குறைந்து வருவதால் வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 9 லிருந்து 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 50% திறனுடன் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளிகள் திறப்பு

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உருவான கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் தற்போதுள்ள புதிய பாதிப்புகளை ஆய்வு செய்த மாநில அரசு
செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு 50 சதவீத திறனுடன் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படும்.

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதி விடுமுறை – அரசு உத்தரவு!

இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ‘மாநிலம் முழுவதும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பிற பயிற்சி நிறுவனங்கள் செப்டம்பர் 1 முதல் திறக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் அனைவரும் நீரை வகுப்புகள் துவங்குவதற்கு 14 நாட்களுக்கு முன்பு குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்திருக்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகளை திறப்பது குறித்து உள்துறை துறையால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, பயிற்சி நிறுவனங்களின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 2 டோஸ் தடுப்பூசி போடப்படிருக்க வேண்டும். அதேசமயம் இந்த ஊழியர்களுக்கான போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும். தொடர்ந்து வழக்கமான வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதலை சமர்ப்பிக்க வேண்டும். எந்தவொரு மாணவரும் நேரடி வகுப்பில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்.

வீட்டு வேலை பார்க்க கஷ்டப்படும் பாக்கியா, சாப்பாடு நல்லா இல்லை என்று குறை சொல்லும் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

தவிர வழக்கமான வகுப்புகளுக்கு வராதவர்களுக்காக ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசங்களை அணிந்தும் கொரோனா தொடர்பான மற்ற அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும். இருப்பினும் கொரோனா பரிசோதனைக்குப் பிறகு மாணவர்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேருக்கு புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!