இன்று முதல் 10 நாட்களுக்கு இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று நிலவரம் மற்றும் பண்டிகை நாட்களை கருத்தில் கொண்டு மாநில அரசு இன்று முதல் குறிப்பிட்ட 2 நகரங்களில் 10 நாட்கள் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இரவு ஊரடங்கு:
இந்தியாவில் கொரோனா 2வது அலை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதனால் மாநில வாரியாக அமலில் உள்ள ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு மெல்ல இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதற்கிடையில் கொரோனா 3வது அலை அச்சம் அதிகரித்துள்ளது. மறுபுறம் தீபாவளி, தசரா என பண்டிகை தினங்கள் வருவதால் மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனையடுத்து கொரோனா பரவல் சற்று அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அந்த வகையில் ஒடிஷா மாநில அரசு இன்று முதல் கட்டாக், புவனேஸ்வரில் 10 நாள் இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,303 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
தினசரி இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அனைத்து கடைகள், மால்கள், உணவகங்கள் இரவு 8 மணிக்குப் பிறகு மூடப்படும். கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களின்படி அனைத்து மத விழாக்கள் நடத்தப்பட வேண்டும். இரவு நேர ஊரடங்கு உத்தரவை காவல்துறை மிகக் கடுமையாக கண்காணித்து, மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என்று போலீஸ் கமிஷனர் எச்சரித்து உள்ளார்.
தமிழகத்திற்கான வருவாய் பற்றாக்குறை ரூ.183.67 கோடி – மத்திய அரசு ஒதுக்கீடு!!
ஒடிசா அரசு இந்த பண்டிகை மாதத்தில் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது. இது பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காகவும், மாநிலத்தில் தொற்று பரவுவதைத் தடுக்கவும் பயனுள்ளதாக உள்ளது. எச்சரிக்கையுடன், பாதுகாப்பான மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பண்டிகைகளை கொண்டாட அனுமதிக்க வேண்டியது முக்கியம். அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.