அக்.31 வரை தினசரி 5 மணிநேரம் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு அக்டோபர் 31 வரை தினசரி 5 மணிநேரம் இரவு நேர முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என மாநில அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
இந்தியாவில் கொரோனா 2வது அலை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் மாநில வாரியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதில் பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப அதிகப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டதால் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இருப்பினும் கொரோனா 3வது அலை மற்றும் பண்டிகை தினங்களை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை அமலில் வைக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஆந்திர மாநில அரசு வருகிற அக்டோபர் 31ம் தேதி வரை தினசரி 5 மணிநேரம் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டுக்கு மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் – எளிய வழிமுறைகள் இதோ!
அதன்படி தினசரி இரவு நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே இரவு ஊரடங்கு அமலில் இருக்கும். இதுவரை ஊரடங்கு நேரம் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. திருமணங்கள் உட்பட பொதுக் கூட்டங்களில் அதிகபட்சம் 250 நபர்களை அனுமதிக்கும் கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தி உள்ளது. முன்பு இதுபோன்ற கூட்டங்களில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தியேட்டர்களும் செயல்பட அனுமதி வழங்ப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் இதுவரை 20,58,582 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 20,37,691 பேர் கொரோனா தொற்றில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 14,276 ஆகும். இதனால் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து அமலில் வைக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.