செப்.30 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
செப்.30 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
செப்.30 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
செப்.30 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. புதிய வழிகாட்டுதல்களின் படி 300 பேர் வரை அரசியல் உட்பட அனைத்து கூட்டங்களும் அனுமதிக்கப்படுகின்றன.

ஊரடங்கு நீட்டிப்பு:

இந்தியாவில் கொரோனா 2வது அலையால் தினசரி 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் பதிவாகிய நிலையில் மாநில அரசுகள் சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் தொற்று நிலவரத்துக்கு ஏற்ப தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா 2வது அலை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் 3வது அலை அச்சம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கவனம் தேவை என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநில அரசு செப்டம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு – அமைச்சர் தகவல்!

புதிய வழிகாட்டுதல்களின்படி 300 பேர் வரை அரசியல் உட்பட அனைத்து கூட்டங்களும் அனுமதிக்கப்படுகின்றன. முதல்வர் அமரீந்தர் சிங் இந்த மாதத்திற்குள் அங்கன்வாடி மையங்களைத் திறக்க தயாராகுமாறு சமூக பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த மையங்கள் திறப்பது கொரோனா தடுப்பூசி மற்றும் பிற வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். முகக்கவசம் அணிவது குறித்து கோவில்கள் மற்றும் குருத்வாராக்களில் இருந்து தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும் என அனைத்து மத அமைப்புகளுக்கும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

கிசான் திட்டத்தில் பயன் அடையும் விவசாயிகள் கவனத்திற்கு – இரட்டை பலன்கள் வாய்ப்பு!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முடிவிற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவர்க்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்கிற இலக்குடன் சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்து முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!