செப்.21 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போது கொரோனா 3 ஆம் அலை பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் திருமண விழாக்களில் கலந்து கொள்பவர்களுக்கு தடை நீக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை குறைந்து வருவதையொட்டி பல்வேறு மாநிலங்களில் 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் உத்தரகண்ட் மாநிலத்திலும் தற்போது கொரோனா 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (செப்டம்பர் 14) காலை 6 மணியுடன் முடிவடைந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளை சேதப்படுத்திய புகாரில் ரிலையன்ஸ்,ஏர்டெல் – மாநில அரசு அபராதம்!
இந்த பொது முடக்க காலத்தில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் மண்டபம் அல்லது அரங்கத்தில் 50 சதவீத திறனுடன் திருமண விழாக்களை நடத்திக்கொள்ள மாநில அரசு அனுமதித்துள்ளது. அதே நேரத்தில் திருமண விழாக்களில் பங்கேற்க முழு தடுப்பூசி சான்றிதழ் மற்றும் கொரோனா எதிர்மறை அறிக்கையைக் காட்ட வேண்டியதில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மின்பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 3.16 கோடியை தாண்டியது – மின்வாரிய அதிகாரி தகவல்!
இதனிடையே அம்மாநிலத்தில் செப்டம்பர் 17 ஆம் தேதிக்குள் 1,000 தடுப்பூசி மையங்களில் ஒரு கோடி மக்களுக்கு தடுப்பூசி போட அரசு நிர்ணயித்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் தன்சிங் ராவத் தெரிவித்துள்ளர். உத்தரகண்டில் கடந்த 24 மணி நேரத்தில் 24 புதிய கொரோனா தொற்றுக்கள் மட்டும் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் 23 பேர் மரணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.