ஜூலை 31 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருவதால், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் ஜூலை 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்ற போதிலும் மிசோரம் மாநிலத்தில் புதிய கொரோனா பாதிப்புகள் அதிகளவு பதிவாகி வருவதால் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகளவு பதிவு செய்யப்பட்டு வரும் ஐஸ்வால் நகராட்சியில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து, மாநிலத்தின் பிற பகுதிகளிலும் தொற்று நோய்களை கட்டுப்படுத்த ஜூலை 31 ஆம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியை வீணடிக்காமல் கையாண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!
கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுப்பதற்காக, தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாட்டை மேலும் தொடர வேண்டியது அவசியம் என்றும், பரிசோதனைகளை மேம்படுத்துவதுவதற்காக கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவித்துள்ளது. மேலும் மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள நோய்த்தொற்று தாக்கத்தை பொறுத்து, துணை கமிஷனர்கள் மற்ற இடங்களில் ஊரடங்கு அல்லது பிற கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கல்லூரிகளில் ஆன்லைன் மாணவர் சேர்க்கை – கடும் போட்டி!
இந்த பொதுமுடக்க காலத்தில் நீர், மின்சாரம், சுகாதாரம், தடுப்பூசி மற்றும் கேஸ் விநியோகம் போன்ற அத்தியாவசிய சேவைகள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் ஐஸ்வால் பகுதியில் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மற்ற பகுதிகளில் போக்குவரத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மிசோரத்தில் நேற்று (ஜூலை 23) ஒரு நாளில் 847 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.