ஜனவரி 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
ஜனவரி 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
ஜனவரி 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
ஜனவரி 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை பரவல் காரணமாக மஹாராஷ்ரா மாநிலத்தில் ஜனவரி 7ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை ஜனவரி 15ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

144 தடை உத்தரவு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் முதல் அலை கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதல் அதிக பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது. அதனை பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் நோய் பரவலை படிப்படியாக குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. முதல் அலை பரவல் குறைந்து மெல்ல இயல்பு நிலை திரும்ப தொடங்கிய சமயத்தில் மீண்டும் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் அதிகரிக்க தொடங்கியது. ஆனால் 2ம் அலை தாக்கத்தின் போது மாநிலங்களில் உள்ள நிலைமையை பொறுத்து கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – பொங்கல் பரிசில் ரொக்கப்பணம்?

முதல் மற்றும் இரண்டாம் அலை ஆகிய இரண்டு முறையும் மற்ற அனைத்து மாநிலங்களையும் விட அதிகம் பாதிக்கப்பட்டது மகாராஷ்டிரா தான். இதனால், இங்கு தீவிர கட்டுப்பாடுகள் அதிக நாட்களுக்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், மீண்டும் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை பரவல் கண்டறியப்பட்டு தற்போது அதிக எண்ணிக்கையில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் 3,900 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று மட்டும் 5,368 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அம்மன் அவதாரம் எடுத்த ‘பிக் பாஸ்’ புகழ் நமீதா மாரிமுத்து – பரவசத்தில் பக்தர்கள்!

இந்த எண்ணிக்கையானது கடந்த மே மாத தினசரி எண்ணிக்கையை அதிகபட்ச எண்ணிக்கையாகும். அதிலும் மும்பை நகரத்தில் ஓமைக்ரான் பாதிப்பு அதிகம் பதிவாகி வருகிறது. இதனால் முன்னதாக டிசம்பர் 30, 2021 முதல் ஜனவரி 7, 2022 அன்று இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதால் இந்த 144 தடை உத்தரவு ஜனவரி 15ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மும்பையில் கடற்கரைகள், திறந்தவெளி மைதானங்கள், பூங்காக்கள் மற்றும் ஊர்வலம் போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!