ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு உத்தரவு ரத்து – மாநில அரசு அறிவிப்பு!

0
ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு உத்தரவு ரத்து - மாநில அரசு அறிவிப்பு!
ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு உத்தரவு ரத்து - மாநில அரசு அறிவிப்பு!
ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு உத்தரவு ரத்து – மாநில அரசு அறிவிப்பு!

சண்டிகரில் குறைந்து வரும் கொரோனா பரவல் வீதத்தை கணக்கில் கொண்டு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு ரத்து

கொரோனா 2 ஆம் அலை பாதிப்புகள் நாடு முழுவதும் வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்து பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு நாள் பாதிப்பு வீதம் 80 ஆயிரமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

எனினும் சில மாநிலங்களில் மட்டும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் பாதிப்பை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சண்டிகர் மாநிலத்தில் கொரோனா பரவல் வீதம் சரிந்து வருவதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விதிக்கப்பட்டிருந்த பொது முடக்கத்தை ரத்து செய்வதாக வி.பி.சிங் பட்னோர் தலைமையிலான நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் தினசரி இரவு நேர ஊரடங்கு உத்தரவானது இரவு 10:30 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும். இது தவிர சுக்னா லேக் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்காக காலை 5 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் மட்டுமே பொது மக்கள் பயன்பாட்டுக்காக அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!