முதல் மற்றும் 2 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா பேரலை காலத்தில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மற்றும் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வதாக உத்திர பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.
தேர்வுகள் ரத்து:
உத்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு வீதமானது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் மாணவர்களுக்கு கல்லூரி மற்றும் பல்கலை தேர்வுகளை நடத்துவது சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், இறுதியாண்டு மாணவர்களை தவிர பிற மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் அம்மாணவர்கள் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் அடுத்த வகுப்புகளுக்கு செல்வார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
கடைகள் மதியம் 1 மணி வரை மட்டுமே இயங்கும் – கொரோனா பரவல் எதிரொலி!
இதற்கிடையில், கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் தேர்வுகளை நடத்த உத்திர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து அம்மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறுகையில், மாநில அரசின் இந்த முடிவால் சுமார் 41 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் நேரடியாக அடுத்த ஆண்டுக்கு உயர்த்தப்படுவார்கள்.
TN Job “FB Group” Join Now
இரண்டாம் ஆண்டு இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு, முதல் ஆண்டு இறுதி முடிவுகளின் அடிப்படையில் பதவி உயர்வு கிடைக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் முதலாம் ஆண்டு பட்டதாரி மாணவர்கள் அனைவரும் அடுத்த வகுப்பிற்கு சென்றாலும், 2022 ஆம் கல்வி ஆண்டில் அவர்கள் எடுக்கும் இரண்டாம் ஆண்டு இறுதி தேர்வுகளின் முடிவை வைத்து அவர்களின் மதிப்பெண்கள் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, உத்திர பிரதேசத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.