பள்ளி மாணவர்களுக்கு மே 6 முதல் ஜூலை 3 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

0
பள்ளி மாணவர்களுக்கு மே 6 முதல் ஜூலை 3 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு மே 6 முதல் ஜூலை 3 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு மே 6 முதல் ஜூலை 3 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் கோடை வெப்பம் தீவிரமாகி உள்ளது. பல இடங்களில் கத்திரி வெயிலுக்கு முன்பாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளுக்கு மே 6 முதல் ஜூலை 3 வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வி ஆணையர் எஸ்.சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கோடை விடுமுறை:

கடந்த 2 வருடங்களாக கொரோனா எழுச்சியால் பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்றது. மேலும் தீவிர நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு அதன் பலனாக பள்ளிகள் மீண்டும் நடப்பு ஆண்டு தொடக்கத்திலேயே, திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டுதான் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே முந்தைய ஆண்டை விட வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கோடை தொடங்கியது முதலே உஷ்ணம் வாட்டி வதைக்கிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த ஆண்டிலும் விதிவிலக்கில்லாமல் கோடை வெயில் தொடங்கிய ஏப்ரல் முதல் வாரத்திலேயே வெப்பம் உயர்ந்தது. பல்வேறு மாநிலங்களிலும் வெப்பநிலை 40 – 45 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்கள் நலனுக்காக கோடை விடுமுறையை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளுக்கு மே 6 முதல் ஜூலை 3 வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வி ஆணையர் எஸ்.சுரேஷ் குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் ‘1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகளை மே 4ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி (DA) உயர்வு – முதல்வரின் அதிரடி உத்தரவு!

இதை அடுத்து பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை மே 6 முதல் ஜூலை 3 வரை ஆகும். இந்த கோடை விடுமுறைகள் முடிந்து 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் ஜூலை 4ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், SA-II தேர்வுகளின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கும், ஆன்லைனில் மதிப்பெண்களைப் பதிவேற்றுவதற்கும், பதவி உயர்வு பட்டியல்களைத் தயாரிப்பதற்கும், அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) மாணவர் சேர்க்கை பணிகளுக்காக ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!