ஜூன் 25 முதல் மாநிலங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கம் – மாநில அரசு அறிவிப்பு!

0
ஜூன் 25 முதல் மாநிலங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கம் - மாநில அரசு அறிவிப்பு!
ஜூன் 25 முதல் மாநிலங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கம் - மாநில அரசு அறிவிப்பு!
ஜூன் 25 முதல் மாநிலங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கம் – மாநில அரசு அறிவிப்பு!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களில் இருந்து மேலும் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 25 முதல் பெங்களூரில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு பேருந்து சேவைகள் மீண்டும் துவங்கவுள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்

கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏறத்தாழ 50 நாட்களுக்கு பிறகு பேருந்துகள் மீண்டுமாக இயக்கப்பட்டு வருகின்றன. கர்நாடக மாநிலத்திலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – 2 நாட்கள் நீட்டிப்பு!

அந்த வகையில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபயிற்சிக்காக திறக்கப்பட்டுள்ளது. தவிர மாநிலம் முழுவதும் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவானது ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இன்றே கடைசி நாள்!

இருப்பினும், தினசரி மாலை 7 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவானது வெள்ளிக்கிழமை மாலை 7 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஜூன் 25 ஆம் தேதிக்கு பிறகு கர்நாடகாவில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு பேருந்து சேவைகளை மீண்டும் துவங்குவதாக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னை புறநகர் ரயில் சேவைகள் இன்று முதல் துவக்கம் – பொதுமக்களுக்கு அனுமதி!

அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு, சிவமோகா, மங்களூரு மற்றும் பிற இடங்களிலிருந்து மும்பை, புனே, மீராஜ், சோலாப்பூர், பண்டாராபூர் மற்றும் துல்ஜாப்பூர் ஆகிய நகரங்களுக்கு பேருந்து போக்குவரத்து சேவைகள் 50% இருக்கை வசதியுடன் செயல்பட உள்ளது. இது தவிர மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு 3,000 பேருந்துகளை மட்டுமே பயன்படுத்தவுள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் பெங்களூரு மாநகரத்தில் இருந்து மட்டும் 2,000 பேருந்துகள் வரை இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!