பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்த மாநில அரசு – கனமழை எதிரொலி!
இந்தியா முழுவதும் பரவலாக அனைத்து மாநிலங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் ஆர்பரித்து ஓடுகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக மேகாலயாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
இந்தியாவில் வடகிழக்கு பருவ மழை பெய்ய தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘சிட்ராங்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிட்ராங் புயல் இன்று டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த புயலின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்து வருகிறது. அதே போல வட மாநிலங்களான அசாம், மேகாலயா, அருணாசல பிரதேசம், மிசோரம், திரிபுராவிலும் புயலின் தாக்கம் இருந்து வருகிறது. இதனையடுத்து மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேகாலயாவில் இன்று (அக்.25) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு – அரசின் அதிரடி உத்தரவு!
Exams Daily Mobile App Download
மேலும் மேகாலயாவின் பல பகுதிகளில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.