மாநில அரசின் விண்ணப்பத்துக்கு அதே மொழியில் பதில் அனுப்ப வேண்டும் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு !
மாநில அரசுகள் அனுப்பும் விண்ணப்பத்துக்கு அதே மொழியில் மட்டுமே பதில் கடிதம் அனுப்ப வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசுக்கு உத்தரவு
இந்தியா பல்வேறு மதம், மொழி, இனங்களை உள்ளடக்கிய ஒரு நாடாகும். அதாவது நம் நாட்டில் உள்ள 28 மாநிலங்களிலும், 8 யூனியன் பிரதேசங்களிலும் வெவ்வேறு வகையான பாரம்பரியமும், கலாச்சாரமும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் மொழி என்பது விதி விலக்கல்ல. அந்த வகையில் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 19,500 மொழிகளை பேசக்கூடிய மக்கள் வசிக்கின்றனர். இதில் ஹிந்தி என்ற ஒரு மொழியை தேசிய மொழியாக கருதுவதற்கு பல்வேறு வகையான எதிர்ப்புகள் இன்றளவும் காணப்பட்டு வருகிறது.
தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும் டெல்டா வைரஸ் – திடுக்கிடும் தகவல்
இதனிடையே ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பங்களை அனுப்புகிறதோ அதே மொழியில் தான் மத்திய அரசு பதில் கடிதம் அனுப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதாவது மதுரையை சேர்ந்த எம்.பி சு.வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.
TN Job “FB Group” Join Now
அதில், தான் அனுப்பிய கடிதத்துக்கு மத்திய அரசு ஹிந்தியில் பதிலளித்திருந்ததாக கூறி அதற்கு பதில் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களுக்கு ஹிந்தி மொழியில் பதிலளிப்பது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது. அதனால் ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பங்களை அனுப்புகிறதோ அதே மொழியில் பதில் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.