தமிழகத்தில் விரைவில் மாநில கல்வி கொள்கை? அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அரசு எதிர்த்து வருகின்ற நிலையில் தற்போது மாநில கல்விக்கொள்கை உருவாக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
மாநில கல்விக் கொள்கை
தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் மாநிலத்திற்கென மாநில கல்விக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பாக பொதுமக்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தனியார் கல்வி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் உள்ளிட்டவர்களிடம் கருத்துக்கேட்பு நடைபெற்று வருகிறது.
மேலும் மாநில கல்வி கொள்கை வகுக்க உயர்மட்ட குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. அத்துடன் அனைவருடனும் கருத்து மற்றும் ஆலோசனை கேட்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேசிய கல்விக்கொள்கையில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது.
விவாகரத்து பற்றி உண்மையை சொன்ன எழில், அதிர்ச்சியில் ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் ட்விஸ்ட்!
ஆனால் இதனை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மாணவர்களிடையே இடைநிற்றல் அதிகரிக்கக்கூடும் என்றார். அதனால் இதுவரை 10 ,12ம் வகுப்பில் பொதுத்தேர்வு மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார். இதையடுத்து தற்போது தேசிய கல்விக்கொள்கையை எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய கல்வி அமைச்சரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் விரைவில் மாநில கல்வி கொள்கை வகுக்கப்படும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்