தமிழகத்தில் மாநில வளர்ச்சி கொள்கை குழு – துறைகள் ஒதுக்கீடு!!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி துறைகளும், அவர்களின் பெயர்களும் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மாநில வளர்ச்சி கொள்கை குழு :
தமிழகத்தில் 1971ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி கருணாநிதி அவர்களால் மாநில திட்டக் குழு உருவாக்கப்பட்டது. இது முதல்வரின் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வந்தது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகளை இந்த குழு செய்து வந்தது.
தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் – கல்வியாளர்கள் கருத்து!
இதன் மூலம் மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் ஆலோசனைகள் அளிக்கப்படுகிறது. இந்த குழுவானது 23.04.2020ல் ஸ்டாலின் அவர்களால் மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. மாநில வளர்ச்சி கொள்கை குழுவை திருத்தியமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன் படி ஒவ்வொரு உறுப்பினர்களின் துறைகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. இதன் படி,
- மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்
- முழுநேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனுவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ம. விஜயபாஸ்கர், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு.தீனபந்து, டி.ஆர்.பி. இராஜா, மல்லிகா சீனிவாசன், ஜோ.அமலோற்பவநாதன், கு.சிவராமன், நர்த்தகி நடராஜ் ஆகியோர் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- விவசாய கொள்கை மற்றும் திட்டமிடல் துறை ஜெயரஞ்சனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- கல்வி வேலைவாய்ப்பு துறை விஜயபாஸ்கர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- நில உபயோகம் சுல்தான் அஹ்மத் இஸ்மாயிலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- கிராம அபிவிருத்தி மற்றும் மாவட்ட திட்டமிடல் துறை மல்லிகா சீனிவாசன், தீனபந்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- விவசாய கொள்கை மற்றும் திட்டமிடல் – டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- சுகாதாரம் சமூக நலத்துறை அமலோற்பவநாதன், கு.சிவராமன், நர்த்தகி நடராஜ் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.