மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் – சொந்த ஊருக்கு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்!!
கர்நாடகா மாநிலத்தில் இன்று (ஏப்ரல் 27) முதல் இரண்டு வாரங்களுக்கு முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் பணி செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப துவங்கியுள்ளனர்.
பொது முடக்கம்:
நாடு முழுவதும் பெருகி வரும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ? என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனால் தென் மாநிலங்களில் தொழில் செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப துவங்கியுள்ளனர். முன்னதாக மஹாராஷ்டிராவில் அதிகரித்து வரும் நோய்த்தொற்று காரணமாக அங்கு தங்கியிருந்து வேலை பார்த்து வந்த பீஹார் போன்ற வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
TN Job “FB Group” Join Now
தொடர்ந்து தமிழகத்திலும் கோவை, சென்னை போன்ற இடங்களில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திலும் கொரோனா நோய்த்தொற்று எதிரொலியாக அம்மாநிலத்தில் இருந்த வடமாநில பணியாளர்கள் வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பல ஆயிரமாக உயர்ந்து வருகிறது.
உள்நாட்டு விமான பயணங்களுக்கும் கொரோனா சான்று அவசியம்!!
இதனால் அம்மாநிலத்தில் இரவுநேர ஊரடங்குடன், வார இறுதி முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் நோய் தாக்கம் குறையாத பட்சத்தில், மாநிலம் முழுவதும் இன்று (ஏப்ரல் 27) முதல் மே 10 வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் வேலை பார்த்து வந்த வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்களது குடும்பத்தோடு சொந்த ஊர்களுக்கு திரும்ப துவங்கியுள்ளனர்.