தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – ஓரிரு நாட்களில் தொடக்கம்!
தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு தேர்வு மே 5ம் தேதியும் மற்றும் 10ம் வகுப்பு தேர்வு மே 6ம் தேதியும் தொடங்க இருக்கிறது. அதனால் தேர்வுக்கான ஏற்பாடுகளை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையிலான பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
பொதுத்தேர்வு
கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்படி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படாமலே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இரண்டு வருடம் மாணவர்கள் தேர்வு எழுதாத காரணத்தால் கண்டிப்பான முறையில் இந்த வருடம் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.
TN Job “FB Group” Join Now
இந்த ஆண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருக்கிறது. இருப்பினும் அரசின் தொடர் முயற்சியின் காரணமாக கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. இந்நிலையில் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தபடி, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையும் வெளியிட்டு இருந்தனர். இதையடுத்து 10, 12ம் வகுப்புகளுக்கான தேர்வில் 26 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருக்கிறார்.
இன்றும், நாளையும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – ரம்ஜான் கொண்டாட தடை!
மே மாதம் கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்த நிலையிலும், தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன் பேரில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தமிழகத்தில் சுமார் 3500 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 1000 பறக்கும் படைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா பாதிப்பினை தவிர்க்க அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.