Post Office: SSY சேமிப்பு திட்டத்தில் இவ்வளவு பலன்களா? பெண் குழந்தைகளுக்கு ஏற்றது!!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அதில் குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக சேமிக்கும் பெற்றோர்களுக்கு சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இத்திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் பெண் குழந்தைகளுக்காக சேமிக்க சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற சேமிப்பு திட்டம் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாக கணக்கை தொடங்கலாம். இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 குழந்தைகள் வரை சேமிக்கலாம்.
Follow our Twitter Page for More Latest News Updates
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ரூ.250 முதல் அதிகபட்ச தொகையாக ரூ.1,50,000 வரை சேமிக்க முடியும். ஆனால் மாதந்தோறும் குறைந்தபட்ச தொகையை செலுத்தவில்லையெனில் ரூ. 50 அபராதமாக செலுத்த வேண்டும். நீங்கள் தொடர்ந்து செலுத்தவில்லையெனில் உங்களின் கணக்கு செல்லாததாக மாறிவிடும். இதனை மீண்டும் புதுப்பிக்க எப்போது வேண்டுமானாலும் குறைந்தபட்ச தொகை மற்றும் அபராத தொகையை செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம்.
‘தமிழக அரசு கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் – உயர் கல்வித்துறை அமைச்சர் பேட்டி!
இந்த திட்டத்தில் 7.6 சதவீத வட்டி விகிதம் வரை கிடைக்கிறது. தற்போது நீங்கள் உங்கள் மகள் பிறந்தவுடன் சேமிப்பு கணக்கை இத்திட்டத்தில் ரூ.1000 முதலீடு செய்து தொடங்குகிறீர்கள் எனில் ஆண்டுக்கு ரூ.12,000 செலுத்த வேண்டும். அதன்படி முதிர்வு காலத்தின் முடிவில் உங்களுக்கு வட்டியுடன் சேர்ந்து ரூ.5 லட்சத்திற்கும் மேல் சேமிப்பு தொகை கிடைக்கும்.