10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் – மாநில அரசு அறிவிப்பு!!
கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி (10 ஆம் வகுப்பு) மற்றும் பி.யூ.சி 2021 தேர்வுகள் அதிகாரப்பூர்வமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி ஜூன் முதல் வாரத்திலும், பியூசி தேர்வுகள் மே மாதத்தில் நடத்தப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் அறிவித்து உள்ளார்.
பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு:
கர்நாடகாவில் கடந்த ஜனவரி 1ம் தேதி 10ஆம் வகுப்பு மற்றும் பியூசி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பரவியதால் சில பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதற்கிடையில் அம்மாநிலத்தில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் 10ம் வகுப்பு மற்றும் பியூசி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இறுதி பாடத்திட்டங்கள் அந்தந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன.
10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
இது தொடர்பாக வெளியிடப்படட்ட கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்வில், பொதுத்தேர்வு தேதி குறித்த அட்டவணை வெளியிடப்படவில்லை. மேலும் விரிவான தேர்வு நேர அட்டவணை விரைவில் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்கள் KSEEB மற்றும் PUE-Karnataka க்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதனை அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளை தாமதமின்றி திறக்க வேண்டும் – பெற்றோர்கள் வலியுறுத்தல்!!
1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த கேள்விக்கு, பதில் அளித்த கல்வி அமைச்சர், அதற்கான எந்த திட்டமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். மேலும் புதிய வகுப்புகளுக்கான அட்டவணை ஏற்கனவே அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்