மத்திய அரசின் சுருக்கெழுத்தாளர் தேர்வு – ஹால்டிக்கெட் வெளியீடு விவரம் இதோ!
இந்தியாவில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்த கூடிய சுருக்கெழுத்தாளர் தேர்வு வரும் 17, 18 ஆகிய இரு தினங்களும் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் முக்கிய தகவல் கிடைத்துள்ளது.
ஹால் டிக்கெட்:
இந்தியாவில் மத்திய அரசு துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு SSC தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது சுருக்கெழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. தற்போது மத்திய அரசின் துறைகளிலும் தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேவை அதிகரித்துள்ளது. இதனையடுத்து காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து இதற்கான விண்ணப்பப பதிவுகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் தேர்வு தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் 17,18ம் தேதி சுருக்கெழுத்தாளர் ‘சி, டி’ நிலை பணிக்கான தேர்வு நடைபெறும் என்று SSC தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இத்தேர்வானது சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நடைபெறஉள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த தேர்வுக்கான அனுமதி சீட்டு, தேர்வு நடைபெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன் வெளியிடப்படும். தேர்வர்கள் இணையதளத்தில் இருந்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தேர்வாணையத்தால் தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வு அறைக்குள் தேர்வர்கள் எடுத்து செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.