SSC தேர்விற்கான கால அட்டவணை வெளியீடு – தேர்வாணையம் அறிவிப்பு!
எஸ்எஸ்சி தேர்விற்கான காலஅட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, எந்தெந்த தேதிகளில் தேர்வு நடைபெறும், விண்ணப்பிக்கும் தேதி என அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எஸ்எஸ்சி தேர்வு:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022 ஆம் ஆண்டிற்கான எஸ்எஸ்சி தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதாவது, ஒருங்கிணைந்த பட்டதாரி (நிலை-1)-க்கான தேர்வு குறித்தான அறிவிப்பு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஒருங்கிணைந்த மேல்நிலை(10+2) (முதல் நிலை) தேர்வு குறித்தான அறிவிப்பு நவம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், டிசம்பர் 4 ஆம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், எழுத்துத் தேர்வு ஜனவரி-பிப்ரவரி 2023 ல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இளநிலை பொாறியாளர் தேர்வு குறித்தான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், செப்டம்பர் வரை விண்ணப்பிக்கலாம் எனவும், நவம்பர் மாதத்தில் எழுத்து தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், காவலர் நிலையிலான பணி குறித்தான அறிவிப்பு டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், ஜனவரி 19 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம் எனவும், மார்ச்-ஏப்ரல் 2023 மாதங்களில் எழுத்து தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்வு? முக்கிய அறிவிப்பு!
இதனையடுத்து, சார்-ஆய்வாளர் பணி குறித்தான அறிவிப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், நவம்பர் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சுருக்கெழுத்தாளர் நிலை சி மற்றும் டி தேர்விற்கான அறிவிப்பு ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், தேர்விற்கு செப்டம்பர் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், நவம்பர் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், பன்னோக்கு(தொழில்நுட்பம் சாராத) பணியாளர் தேர்விற்கான அறிவிப்பு ஜனவரி 12 2023 ல் வெளியிடப்படும் எனவும், பிப்ரவரி 24 ஆம் தேதி வரை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் எனவும், மேலும், ஏப்ரல் – மே மாதங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.