SSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு ..!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Multi-Tasking (Non-Technical) Examination மற்றும் Sub-Inspectors in Delhi Police and CAPFs Examination (Paper-II) 2020 தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் அனைவரும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
SSC MTS தேர்வு ஒத்திவைப்பு:
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் MTS தேர்வுக்கான ஆன்லைன் பதிவானது 05.02.2021 முதல் 21.03.2021 வரை நடைமுறையில் இருந்தது. அவற்றிக்கான தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். அதாவது Tier 1 – கணினி சார்ந்த தேர்வு (CBT) மற்றும் Tier 2 – Descriptive Type போன்ற முறைகளில் நடத்தப்படும்.
TN Job “FB Group” Join Now
இந்த தேர்வுக்கு இந்தியாவில் பல லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், இதற்கான முதற்கட்ட தேர்வுகள் வரும் 01.07.2021-20.07.2021 முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் காரணமாக பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இந்த தேர்வானது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Sub-Inspector தேர்வு ஒத்திவைப்பு:
Sub-Inspectors in Delhi Police and CAPFs (Paper-II) 2020 தேர்வு ஆனது 12.07.2021 அன்று நடைபெறும் என SSC தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் புதிய தேதிகள் உரிய நேரத்தில் ஆணையத்தால் அறிவிக்கப்படும் எனவும், மேலும் பல்வேறு புதிய தகவல்களுக்கு அவ்வப்போது ஆணையத்தின் வலைத்தளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.