பிப்ரவரி 6ம் தேதி முழு ஊரடங்கில் பயணம் செய்ய அனுமதி – SSC CGL தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

0
பிப்ரவரி 6ம் தேதி முழு ஊரடங்கில் பயணம் செய்ய அனுமதி - SSC CGL தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
பிப்ரவரி 6ம் தேதி முழு ஊரடங்கில் பயணம் செய்ய அனுமதி - SSC CGL தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
பிப்ரவரி 6ம் தேதி முழு ஊரடங்கில் பயணம் செய்ய அனுமதி – SSC CGL தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கேரளாவில் வரும் பிப்ரவரி 6ம் தேதியன்று முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் திட்டமிடப்பட்ட ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (SSC CGL) தடையின்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா 3ம் அலைத்தடுப்பு நடவடிக்கையாக ஒவ்வொரு வார இறுதியிலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதத்தில் 23, 31 ஆகிய 2 ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் கேரளா மாநிலம் முழுவதும், கொரோனா தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த வார இறுதி முழு முடக்கத்தை இந்த வாரமும் அதாவது பிப்ரவரி 6ம் தேதியன்றும் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 5 நாட்கள் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளும் மாநில அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய செயல்பாடுகள், அவசர பயணங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 6 ஆம் தேதியன்று SSC CGL தேர்வுகள் நடத்தப்பட இருக்கும் நிலையில், முழு ஊரடங்கு நாட்களில் பயணம் செய்யலாமா என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது. இதற்கு பதிலளித்த மாநில அரசாங்கம், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை பொருட்படுத்தாமல் பிப்ரவரி 6 ஆம் தேதியன்று திட்டமிடப்பட்ட ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (SSC CGL) தடையின்றி நடைபெறும்.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கட்டாய விடுமுறை – மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு!

இதில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கான முறையான ஆவணங்களுடன் பயணம் செய்யலாம் என்று விளக்கம் கொடுத்துள்ளது. அந்த வகையில் தேர்வுக்கு செல்லும் விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட் அல்லது இ-அட்மிட் கார்டை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அதிகாரிகளும் தங்கள் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, திருச்சூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் இந்த SSC CGL தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுகள் காலை 11 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!