மத்திய அரசுத்துறையில் 5000+ காலிப்பணியிடங்கள் – SSC அறிவிப்பு! விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்தியாவில் மத்திய அரசு துறைகள் 5000 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டு வருகிறது. பணியிடங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
காலிப்பணியிடங்கள்:
இந்தியாவில் மத்திய அரசு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் UPSC 24 வகையான பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை அறிவித்தது. மேலும் 2022ம் ஆண்டில் 861 காலிப்பணியிடங்கள் UPSC தேர்வின் மூலம் நிரப்பப்படும். UPSC தேர்வின் முதல் நிலை தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பெரும்பலான பணியிடங்கள் இத்தேர்வின் மூலமாகவே நிரப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து SSC தேர்வாணையம் மத்திய அரசு துறையில் 5000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
YES வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதம் குறைப்பு!
அதன்படி Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) என்ற பணியிடத்திற்கு 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக சம்பளம் 19,900- 63,200 வரை வழங்கப்படும். அடுத்ததாக Postal Assistant (PA)/ Sorting Assistant (SA) பணியிடத்திற்கு சம்பளம் 25,500 – 81,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். Data Entry Operator (DEO) பணியிடத்திற்கு மாதம் 29,200-92,300 வரை ஊதியம் வழங்கப்படும். Data Entry Operator, Grade ‘A’ பணியிடத்திற்கு 25,500 – 81,100 வரை கிடைக்கும்.
இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12ம் வகுப்பில் அறிவியல், கணித பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக மார்ச் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தார்கள் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.