தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – இறுதி வாய்ப்பு..!
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Office Assistant and Other பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Office Assistant and Other பணிக்கென மொத்தம் 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- Agama Teacher – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Office Assistant – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Clerk – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Cooking Assistant & Cook – விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் எழுத மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சமாக 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,000/- முதல் ரூ.1,14,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 13.01.2022 ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.தற்போது அதற்கான கால அவகாசம் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.