நாடு முழுவதும் மே 31 வரை இரவு ஊரடங்கு அமல் – இலங்கை அரசு அறிவிப்பு!!
இலங்கையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் நேற்று முதல் நாடுதோறும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு அமல்:
இலங்கையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் மிகவும் வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி உள்ளது. இதனால் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை – பிரபல நிறுவனம் அறிவிப்பு!!
இரவு நேரங்களில் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை வாகனங்கள் எதுவும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இலங்கையில் இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 98 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 149 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 850 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்